Monday, July 2, 2012

Poombukar eroded ancient city -கரைத் திண்ணும் அலைகளும் தாகம் தீராக் கடலும்.


மனித வேட்கையால் கரை  திண்ணும்  அலைகளும், தாகம் தீரா கடலும்       - பொறியாளர்  இரா. கோமகன், எம்.இ.,

தமிழகக் கடற்புற நிகழ்வுகளை பற்றி அறிய இந்த நூற்றாண்டில் காட்சிப் புலனகாகிய இரு பெரும்  நிகழ்வுகளைப் பற்றி அறிதல் அவசியமாகிறது.  

மிழகம் தன் பெருநிலப் பகுதியை கடந்த சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு 1964ல் இந்த நிகழ்வு  கடலைப் பற்றிய பொதுபுத்தியில் அச்சத்தை மூட்டியது. 1964 டிசம்பர் 22ம் நாள் இரவு 11.55க்கு  தென்கோடியாகிய தமிழ் மண்ணில் அக் கோரத்தாண்டவம் நிகழ்ந்தேரியது. 110 பயணிகள்  5 ஊழியர்களுடன் புறப்பட்ட புகை வண்டியை 280 கி.மீ வேகத்தில் வீசிய சூறாவளியும், 8மீட்டர் உயரம் எழும்பிய கடலலைகளும் விழுங்கி தின்று தீர்த்தன. 653 என்ற எண் கொண்ட பாம்பன், தனுஷ்கோடி பயணிகள் புகைவண்டி தான் அந்த பெரும் சோகத்தை எதிர்கொண்டது. 1800 மக்கள் மாண்டனர். பள்ளிக் கூடங்கள், அஞ்சல் அலுவலகம், கடவுச் சீட்டு அலுவலகம், அரசுத்துறை  அலுவலகங்கள், தேவலாயங்கள் பாம்பன் பாலம், அனைத்தும் 10 கி.மீ  வரை உட்புகுந்த  கடலால்  அழிக்கப்பட்டு, அன்றைய இன்று இரவு தனுஷ்கோடிக்கு விடியாத இரவாக  போனது.  தனுஷ்கோடி மனித சஞ்சாரமற்ற பேய் பூமியாக இடிந்து மண்மேடாகிவிட்ட  கட்டங்களுடன்  கட்சியளித்துக் கொண்டிருக்கிறது.
  
2004 டிசம்பர்26ம் நாள் உலகில் இயற்கை பேரழிவாகப் பதிவு பெற்ற வரலாற்றில் மிகப்பெரும்  நிகழ்வான ‘சுனாமி’ எனப்படும் ஆழிப் பேரலையால் நிலம் அழிந்த நாள். இந்தோனேஷியா - சுமத்திர தீவுகளுக்கிடையில் கடல் கிடை மட்டத்தில் 9.1 ஹெக்டர் அளவில் நிகழ்ந்த நில அதிர்வி  98 அடி உயரமுள்ள பேரலைகள் எழும்பி நிலத்தை விழுங்கின. அன்றைய நள்ளிரவு தாண்டி நிகழ்ந்த ஆழிப்பேரலை கோரத்தாண்டவம் உலகில் நிகழ்ந்து மூன்றாவது பெரிய நிகழ்வாக பதிவானது. அது 3,10,000 மக்களை பலிகொண்டது. இந்தியாவின் கிழக்கு கடற்கரையை தாக்கி மிகப்பெரும் பேரழிவை ஏற்படுத்தியது.  6,91,000 மக்கள் பாதிக்கப்பட்டனர். 7,793  பேர் இறந்து  போயினர். தமிழகத்தில் நாகை கடற்கரை மேலதிகமாக பாதிக்கப்பட்டு 5,525 பேர் மாண்டனர்.   கன்னியாக்குமரியில் 808பேர், கடலூரில் 599பேர், சென்னையில் 206 பேர் காஞ்சிபுரத்தில் 124, புதுக்கோட்டை 15, ராமநாதபுரம் 6, திருநெல்வேலி 4, தூத்துக்குடி3, திருவள்ளூர் 28,  தஞ்சை 22, திருவாரூர் 10, விழுப்புரம் 47 ஆக எல்லா கடற்கரை மாவட்டங்களும் இப்பேரிடரை  எதிர்கொண்டன. இப்பேரிடர் ஒரு நாள் முன்னதாக நிகழ்ந்திருக்குமானால், வேளாங்கன்னி  மேரிமாதாக் கோவில் கிருஸ்மஸ் பண்டிகைக் கூடிய ஒரு லட்சத்திற்கு மேலானவர்  இறந்து போயிருக்கக்கூடும்.  

மண்ணுயிர்களுக்கு வாழ்வாதாரமான இவ்வுலகம் மூன்று பங்கு கடலாகவும், ஒரு பங்கு  நிலமாகவும் உள்ளது. வங்காள விரிகுடா, அரபிக்கடல் மற்றும் இந்து மாக்கடல் என ஆழிசூழ் நிலமான தமிழகம் 950 கி.மீ கடற்கரையை பெற்றுள்ளது. வங்காள விரிகுடாவில் 46 ஆறுகளின் கழிமுகத் துவாரங்கள் உள்ளன. இந்நிலம் வடகிழக்கு மற்றும் தென்மேற்குப் பருவகாற்றால் ஆளப்படுகிறது. தமிழக கடற்கரை வாழ் மக்கள் கூட்டம் சராசரியாக 417 பேர் ஒரு சதுர  கி.மீ என்ற  விகிதத்தில் உள்ளது. இந்தியாவில் 25 சதவிகித ம க்கள் கடற்கரையை ஒட்டி வாழ்கின்றனர்.   இந்தியாவின் கிழக்கு கடற்கரையை சராசரியாக ஆண்டுக்கு எட்டு புயல்கள்  63 கி.மீ  வேகத்தில் தாக்குகின்றன.  இந்த எட்டு புயல்களில் இரண்டு 117 கி.மீவேகம்  உள்ளதாக  தீவிரமடைகின்றன. 

‘முந்நீர் நாப்பண் திமிற்சுடர் போல’       (புறநானூறு :60) 

‘முந்நீரினுட்புக்கு மூவாக் கடம் பெறிந்தான் 
மன்னர் கோச் சேரன் வளவஞ்சி வாழ்வேந்தன்’    (சிலம்பு, ஆய்ச்சியர் ) 

என்று இலக்கியங்கள் கூறும் ‘முந்நீர்’ கடலைக் குறிக்கும். முந்நீர் முச்செய்கையுடைய நீர் எனும் பொருளில். மண்ணைப் படைத்தலும், மண்ணையழித்தலும், மண்ணைக்  காத்தாலும் ஆகிய முச்செயல்களால்  கடல்நீர்  முந்நீர் எனப்பட்டது.  

தமிழகம் காலந்தோறும் கடல்கோள்களால் நிகழ்த்தப்படும் அழிவிற்கு இலக்காகி வருகின்றது.   தமிழின் இரண்டு தமிழ் சங்கங்கள் தென்மதுரை மற்றும் கபடாபுரத்தின் கண் அமைந்திருந்தன என்பதற்கு இலக்கிய சான்றுகள் உள்ளன. இறையனார் களவியலுரையில் இதன் வரலாறு  விவரிக்கப்படுகின்றது.  

முதற் தமிழ்ச்சங்க காலத்தில் தமிழ்நாட்டில் தென்பகுதியில் ‘பஃறுளி’ யும் ‘குமரி’ ஆறும் ஓடின. அவ்விரு பேராறுகளுக்கிடையில் எழுநூற்றுக் காவதப் பரப்புடைய நாற்பத்தொன்பது  நாடுகளும் குமாரி கொல்லம் முதலிய பன்மலை நாடும் அமைந்திருந்தன. தலைச்சங்க காலத்தின் இறுதியில் பன்மலையடுக்கமாகிய குமரி நாட்டைக்  கடல்மீதூர்ந்து அழித்துவிட்டது.  

‘‘பஃறுளியாற்றுடன்  பன்மலையடுக்கத்துக் 
குமரிக்கோடும்   கொடுங்கடல் கொள்ள’’ (சிலம்பு - காடுகாண்காதை) 

என்ற தொடரில் இளங்கோவடிகள் குறிப்பிடுகின்றார். தமிழ் மண்ணின் தென்னெல்லையாகத் திகழ்ந்த குமரியாறும் தொல்காப்பியனார் வாழ்ந்த இடைச்சங்கமும்  கடல்கோளால்  அழிந்தெனத் கூறப்படுகின்றது.  

‘‘அவர்களைச் சங்கம் இரீஇயனார் கடல் கொள்ளப்படும் போந்திருந்த முடத்திருமாறன் முதலாக உக்கிரப்பெருவதியீறாக  நாற்பத் தொன்பதின்மரென்ப’’  என கடைச்சங்க வரலாற்றில்  இறையனார் களவியலுரை உரைக்கின்றது.  

வரலாற்றை அறிவது வாழ்வை அறிவதாகும். வாழ்வை அறிவது வாழ வேண்டிய வழியை  அறிவதாகும். இதில் சுயமோகம் இன்றி வரலாற்றை  ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகின்றது.
    
தமிழக கடற்கரை பல அழகிய சிறப்புடைய துறைமுகங்களைப் பெற்றிருந்ததற்கு பல சான்றுகள் உள்ளன. காவிரிப் பூம்பட்டிணம், மரக்காணம், அரிக்கமேடு, வசவசமுத்திரம்,   காரைக்காடு, அழகன் குளம், நாகப்பட்டிணம், பெரியப்பட்டிணம், முசிறி, கொற்கை ஆகியவை அவை. இவற்றின் மூலம் பன்னாட்டு வாணிகம் சிறப்பாக நடைபெற்றன. பன்னாட்டவரின்  வருகையால் சிறந்து விளங்கிய இத்துறை முகங்கள் யாவும்  இன்று தன்னிலை இழந்து தாழ்ந்து  விட்டன.  

 தமிழகத்தின் கடந்த இரண்டாயிர வருடம் அனுபவ வாழ்வில் கடன் சார்ந்த அனுபவங்களின் பதிவுகள் மிக அரிதாகவே தமிழில் இடம் பெற்றுள்ளன. அறவே இல்லை என்று சொன்னால் கூட அதில் மிகப்பெரிய தவறேதும் நிகழ்ந்து விடப்போவதில்லை. சங்க இலக்கிய நெய்தல் திணைப்பாடல்களில் எல்லாம் கவிஞன் கரையோரமாக நடந்து கொண்டிருக்கிறான். அவன் முன்னால் விரிந்த நீர் பரப்பு வியப்பூட்டும் நீர்ப்பரப்பு அவ்வளவே தொல்காப்பியம் சுட்டுவது போல் இது பெருமணல் உலகம், கடலும் கடலைச் சார்ந்த உலகம் அல்ல. கடலே கலங்கும் படியாக சுறாமீனை எறிந்து வேட்டையாடும் பரதவனைக் குறித்த சங்க இலக்கியப் பரப்பில் கேட்க முடியும். ஆனால் சுறாமீன் வேட்டையை கலக்கும் கடலை அனுபவமாகத் தமிழ் வாசக மனதில் பதிய வைக்க சங்க கவிஞர் எவரும் முற்படவில்லை என்ற எம். வேதசகபயகுமாரின் கூற்றில் முழு உண்மையுண்டு. ஆனால் ஒரு சில நெய்தல் திணை சங்கப்பாடல்கள் கடலும் கடல் சார்ந்த வாழ்வையும் முன்வைக்கின்றன. 

வயச்சுறா எறிந்த புண் தணிந்து, எந்தையும் 
நில் நிறப் பெருங்கடல் புக்கனன் யாவும் 
உப்பை மாறி வெண்ணெல் தரீஇய
உப்பு வினை கழனிச் சென்றனள்    (குறுந்தொகை 269) 
என்று,    

கல்லாடனாரும், நற்றினைப் பாடலில் 
பெருநீர் விளையும் எம் சிறு  நல் வாழ்கை 
நும்மொரு புரைவதோ அன்றே, 
எம்மனோரில் செம்மாலும் உடைத்தே   (நற்றினை 45) 

இது நெய்தல் நிலவாழ்வை நம்முன் காட்சி புலனாக்கும் ஒரு முயற்சி. நீல் நிறப்பெருங்கடல் கலங்க உட்புகுந்து கடலாண்ட ஒரு சமூகத்தில் அதைப்பற்றிய பதிவுகள் குறைவாக உள்ளது  வருந்த தக்கதே. ஆனால் அதைப்பற்றிய அறிவை ஆழமாக பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 
கடல் சார்ந்த வாழ்கையானது மற்றவர்களை விட காற்றினைச் சார்ந்தே இயங்குவது. அது ஏற்படுத்தும் விளைவு. அது வீசும் திசை, வீசுங்காலம் அதற்கு தக்கவாறு மரக்கலத்தை இயக்க வேண்டியது கடலோடிகளுக்கு தேவையாகிறது. காற்று என்பது பொதுவான ஒன்றாக இல்லாமல், வீசும் திசை மற்றம் தன்மையால் பல்வகையாக மாறுபடுகின்றது. தமிழகக் கடலோடிகள் காற்றினைப்பற்றி தெளிவாக உணர்ந்திருந்தனர். காற்தை எட்டுவகையாக பிரித்து பெயரிட்டு கடல் ஆண்டனர். வீசும் திசையையும் காலத்தையும் கொண்டு கச்சாங்காத்து, கச்சாம் பொறைக்காத்து, குமிஞ்சாங் காத்து, குன்னு வாடகைக்காத்து, கொண்டக்காத்து, மேலாக்காத்து, நெடுங்காத்து, வடமேலாகாத்து இது கிழக்கு கடற்கரை மக்கள் காற்றை வகைப்படுத்தும் முறை. குமரி மாவட்ட மக்கள் காற்றை பதினாறு வகையாகவும் இராமநாதபுரம் மாவட்ட மக்கள் எட்டாகவும் மன்னார் வளைகுடா பகுதியினர் நான்காகவும், வகைப்படுத்துகின்றனர். காற்றின் மாறுபாடு கடல் நீரோட்டத்தில் வேறுபாட்டை மேற்கொள்ள வைக்கின்றன. தமிழக கடற்கரையில் கடல் நீரோட்டம் (டீஉநயn னுசகைவ) கிழக்கு கடற்கரையில் இருப்பது போன்று தென் கடற்கரையி  இருப்பதில்லை. இந்த கடல் நீரோட்டம் தான் கடற்கரைய மாற்றியமைக்கின்றன. கடல் செல்வத்தை நெய்தல் மக்களுக்கு பங்கிடுகின்றன. இதைப்பற்றிய முழுமையான அறிவை நம் நெய்தல் நிலமக்கள் அறிந்திருந்தனர். வாணிவாடு, சோனிவாடு, அரனிவாடு, கரைகட்டுவாடு  என்று நீரோட்டத்தை வாடு என்ற சொல் கொண்டு அது நிகழும் காலத்தை அடிப்படையாகக் கொண்டு வாணி, வன்னி, சோனி, அரனி, கரைகட்டி என்று வகைப்பிரித்தனர். வடகிழக்கு பருவக்காற்றின் காலத்தில் வடக்கிலிருந்த தெற்காகவும், தென் மேற்கு பருவக்காற்றின் தெற்கிலிருந்து வடக்காகவும்  கடல் நீரோட்டம் (டீஉநயn ஊரசசநவே) கிழக்கு கடற்கரையில் நிலவுகின்றது. இந்த நீரோட்டத்திற்கு இடையூறு நேரும் போது அது கரை அரிப்பதும் வேறு இடத்தில் சேர்ப்பதுமாக கரையாளுகின்றது. 

தமிழக கடற்கரை மக்கள் நீரின் தன்மையை வைத்து கடல் செல்வம் ஆளும் திறன் பெற்றிருக்கின்றனர். கடல் நீரை தேத்து என்ற வார்த்தையால பழகுகின்றனர். இருண்ட தேத்து, பூக்கலந்தேத்து, ஒடுக்கு தேத்து, தெளிந்த தேத்து என நால்வகைப்படுத்துகின்றனர். கால நிலைக்கு ஏற்ப கடல் நீரோட்டமும் காற்றும் மாறுபடுவதால் இவற்றின் ஆளுகைக்குட்பட்ட நீரும் மண்ணும் இணையும் போது நிறங்கலும் மாறுபாடு கொள்வதை உணரமுடியும். 

கடல் ஏத்தம், கடல் வத்தல், என்று ழபைh கூனைந மற்றும் டுடிற வனைந யும் குறிப்பிடுகின்றனர். கடல் ஏத்தம் என்பது கடல் பெருகி கரையை மீதூர்ந்திருக்கும் கடல் வத்தல் என்பது கடல் உள்வாங்குதலையும் குறிக்கும். கடற்கரை யாவும் கலங்கரை அல்ல, கலங்கரைக்கு சில இயற்கை ஏற்பாடுகள் தேவை.  கடல் கிடைமட்டம், அலைகளின் கரையாளுகை, முகத்துவாரத்தின் நிலமட்டம், கடல் ஏற்றம், இறக்கம் ஆகியவற்றிற்கு ஏற்ப கலங்கரை ஓட்டத்தினால் கடல் நீரோட்டத்திற்கு இடையூறு தோன்றி கடல்கரை அரிப்பு ஏற்பட வாய்ப்பிருந்தது. இதை உணர்ந்து ஏங்கெல்லாம் கரைஅரிப்புள்ளாகின்றதே அங்கெல்லாம் அக்கரையொட்டி பிறை வடிவமாக ஆற்றின் கழிமுகத்துவாரங்களை அமைத்து கரையாண்டனர். இம்முகத்துவாரங்களின் வழி கடல் ஏற்றத்தின் போது கடலிளிருந்து கலங்களை கரையேற்றவும், கடல் வற்றும் போது கடலுள் செலுத்தும்படியான துறைமுகங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இது தமிழ் மக்களின் கலங்கரை அமைக்கப்பட்டிருந்தன. இது தமிழ் மக்களின் கலங்கரை யாளுகையை பற்றிய அறிவை புரிந்து கொள்ள உதவுகிறது. 

காற்றின் எதிர்திசையில் கலங்களை செலுத்தும் மாண்பினைக் கற்றிருந்தனர். இன்றளவும் கன்னியாக்குமாரி மீனவமக்கள் காற்றின் எதிர் திசையில் கலங்களை வேகமாக செலுத்தும் கலையை கைவரப்பெற்றவராக  நிகழ்கின்றன. அது அலைகள் மற்றும் நீரோட்டம் பற்றிய அறிவு முழுமையாக இல்லாவிட்டால் சாத்தியமே இல்லை. 

அலையின் தன்மையைக் கொண்டு ஆண் அலை பெண் அலை என்று பிரிக்கின்றனர். கடல் அலைகளின் ஓட்டம் தடைபட்டு அவை தன்மை மாறும் இடத்தை மடங்கல் (றுயஎந க்ஷசநயமiபே ஷ்டிநே) என்று அறிவித்தனர். அலைகள் அவ்விடத்தில் தான் மடங்கிச் சுருண்டு வருவது யாவராலும் காணக்கூடியதே. இரு அலைகளுக்கு இடையே உள்ள பகுதி ‘வாங்கியர்’ என்ற சொல்லில் புழங்குவதின் மூலம் இப்பகுதி கலங்களை வாங்கி செலுத்தும் பௌதீக சக்தியை கொடுக்கின்றது. உலகிலேயே கடல் நீரோட்டம் அறிந்து அதன் வழி கலம் செலுத்தும் கலையை தமிழர்கள் கற்றிருந்தனர். இதற்கு கடல் ஆமைகளை தொடர்ந்து கலம் செலுத்தி கடல் ஆண்டவர்கள். இதனால் தான் சோழர்களின் கப்பற்படைக்கு வங்காளவிரிகுடா ஒரு பெரும் ஏரியாக தோன்றியது என  நீலகண்ட சாஸ்திரிகள் கூறுவார். சங்க இலக்கியம் கூறும்  மரக்கலம், நாவாய், வங்கம், மதலை, கப்பல், பஃறி அம்பி, திமில் போன்ற கலங்கள் தமிழர்களால் பயன்படுத்தப்பட்டன. 

நளியிடு முன்னீர் நாவாயோட்டி 
வளிதொரி லாண்டவுரவோன் மருக 
களயியல் யானைக்கரிகால் வளவ   (புறநானூறு 66) 

திமில் வகை கலங்களை கடல் நீரோட்டத்திசையிலே 
செலுத்தினர் என்பது கீழ்காணும் இலக்கிய வரிகள் சான்று வரைக்கும் 
செல்யாற்றுத் தீம்புனலிற் செல்மரம்போல். (பரிபாடல் 6) 

நீர்வழிப் படூஉம் புனை போல்   (புறநானூறு 192)

கடலின் பௌதீக மாற்றங்களையும் அது நிகழும் பருவங்களையும் அறிந்திருந்தினார். அதன்படி  கலங்களை செலுத்துவதிலும் வல்லவர்களாக இருந்தனர் என்பதற்கு நாவாய் சாத்திரம்’’ என்ற ஓலை சுவடிப் பதிவுகள் சான்று. இன்னும் மீன் மற்றும் கடலுயிர் இனங்கள் பற்றி விரிவான அறிவு நெய்தல் மக்களிடம் உண்டு அதுபற்றிய பதிவுகள் இல்லாமலிருக்கின்றது. 
நெடிய அனுபவமும் கொணட இம்மண்ணின் மக்களது செல்வமும் அதற்கு ஆதாரமான கடற்கரையும் அழிக்கப்படுவது வேதனைக்குரியது. 

உலகில் அபூர்மாக அமையப்பெற்ற கடற்பரப்பில் ஒன்று மன்னார் வளைகுடா 10,500 சதுர கி.மீ .பரந்து விரிந்துள்ள இந்த பரப்பு 3600 அரிய கடல் உயிரினங்களுக்கு புகலிடமாக உள்ளது.  குளிர்காலத்தில் கூட 250ஊ வெப்பமும் கோடையில் மெல்ல மெல்ல உயர்ந்து 320ஊ வெப்பம் அடையும் கடல் உயிர்ச் சூழலுக்கு மிகவும் உகந்ததாக உள்ளது. இதையுணர்ந்து இந்திய நடுவணரசும் தமிழக அரசும் இப்பரப்பினை தேசிய கடற் பூங்காவாக அறிவித்துள்ளது. ஆனால் இதன் உயிர் சூழலை அச்சுறுத்தும் அழிவாற்றல் சக்திகள் நாகை கடற்கரையில் அனல் மின் நிலையமாக அமையப் போகின்றன. இந்த அனல் மின் நிலையங்கள் மூலம் வெளியேற்றப்படும்  பௌதீக வேதி வினைகளுக்கு உட்பட்ட நீர் கடல் உயிர் சூழலை அழிப்பது உறுதி. 
தமிழகக் கடற்கரை இய ற் கை  சமன்பாட்டை இழந்து வருகின்றது. இதனால் பல்வேறு  இடங்களில் கடற்கரை அரிப்பு தீவிரமாகியுள்ளது. 13 மாவட்டங்களின் கடற்கரை பல்வேறு வகையில் பாதிப்புள்ளாகின்றது. 


வ. எண். மாவட்டம் மாசு வகைகள்
1. திருவள்ளூர் அனல்மின்நிலையம், தொழிற்சாலை கழிவுகள், ரசாயன கழிவுகள், கழிவுநீர். 
2. சென்னை துறைமுகம், தொழிற்சாலைகள், ரசாயனக் கழிவு, சாக்கடை நீர்,
3. காஞ்சிபுரம் அனல்மின்நிலையம், சாக்கடை, தொழிற்சாலை கழிவு நீர், ரசாயனக் கழிவுநீர், தோல் பதநீடும் கழிவுநீர்,   சாயத்தொழில், கழிவு, சுற்றுலா  
4. விழுப்புரம் சாக்கடை, கழிவு, தொழிற்சாலை கழிவு ரசாயனக் கழிவு, இறால் வளர்ப்பு
5. கடலூர்                   ரசாயனக் கழிவு,  தொழிற்சாலை கழிவு, மீன் வளர்ப்பு
6. நாகை                  அனல்மின் நிலையம், இறால் வளர்ப்பு, சுற்றுலா
7. திருவாரூர் இறால் வளர்ப்பு,
8. தஞ்சாவூர்   சாக்கடை கழிவுகள்
9. புதுக்கோட்டை சாக்கடை கழிவு, நெய்ணெய் மீன், தொழிற்சாலை கழிவு, இறால் வளர்ப்பு
10.   ராமநாதபுரம் மீன்பிடித்துறைமுகம், இறால் வளர்ப்பு, சாக்கடை 
11. தூத்துக்குடி அனல்மின் நிலையம் தொழிற்சாலை, ராசயனகழிவு, உப்புக் கழிவு, ஈசல் வளர்ப்பு, சாக்கடை கழிவு
12. திருநெல்வேலி தொழிற்சாலை, அணுமின் நிலைய கழிவு, சாக்கடை கழிவு
13. கன்னியாக்குமாரி சாக்கடை கழிவு,  மீன் கழிவு, சுற்றுலாக் கழிவு

மேலே குறிப்பிட்ட மாசுகளால் நெய்தல் நிலமக்களின் வாழ்வாதரமான கடல் செல்வமும்,  உயிர் சூழலும் மாற்றத்திற்குள்ளாகி, அழிக்கப்பட்டு வருகின்றது. தமிழகக் க டற்கரைப் பகுதியில்  5500க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. அதில் 2500 தொழிற்சாலைகள் கடற்கரையிலேயே அமைந்துள்ளன. சென்னைக் கடற்கரையில் மட்டுமே 1500 தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. 

தமிழக கடற்கரை சுத்திகரிக்கப்படாத கழிவு நீர், தொழிற் சாலைகளிலிருந்து   வெளியேற்றப்படும் ரசாயனக் கலவையுடனான கழிவுநீர், துறைமுகத்தில் நடைபெறும் தூர்வாரும் பணிகள், கப்பல் கழிவுப் பொருட்கள், கழிவு எண்ணெய் கடலில் கலத்தல்,  மீன் கழிவுகள், அழிந்த பொருட்கள் கடலில் கொட்டுதல் போன்றவற்றால் கடல் மாசுபடுகின்றது.
சென்னை நகரிலிருந்து மட்டும் 17,50,000 ஒவ்வொரு நாளும் லிட்டர் கழிவு நீர் சுத்திகரிப்படாமல் கடலில் கலக்கின்றது. சென்னை, பாண்டிச்சேரி, கடலூர், நாகப்பட்டிணம், தூத்துக்குடி போன்ற பெருநகரங்கள் அல்லாமல்  500க்கும் மேற்பட்ட கடற்கரை கிராமங்களின் கழிவு நீரும்  கடலில் கலக்கின்றன. பல்வேறு தொழிலின் வேதிப் பொருட்களால்  கடல் நீர் மாசுபடுகின்றது.  

வ. எண் மாசுபடுத்தும் நிறுவனச் செயல்                                         மாசுபடுத்தும் வேதிப் பொருட்கள்
1. இராசயனத் தொழிற்சாலை                                                                         பாதரசம்  (ஆநசஉரசல)
2. தொழிற்சாலையின்  வெப்ப நீர் மற்றும்  துருப்பிடித்த குழாய்கள் செம்பு (ஊடியீயீநச)
3. வெளிமண்டல தூசி மற்றும்  மழைநீர்                                                      காரியியம் (டநயன)
4. உலோகத் தொழில்                                                                               (ஷ்inஉ)       (ஊயனஅரைஅ) (ஊhசடிஅரைஅ)
5. நகராட்சி  கழிவுநீர் செம்பு                                                                              (ஊடியீயீநச)      (ஊயனஅரைஅ)
6. நிலக்கரியை  எரித்தல்                                                                       செம்பு (ஊடியீயீநச)  காரியியம் (டநயன) (ணinஉ)
7. எண்ணெய் எரிபொருள்  எரித்தல்                                                     (சூiஉமநட)
8. தூர்வாருதல், துறைமுக கழிவு                                                                       (ணinஉ) காரியியம் (டநயன) செம்பு (ஊடியீயீநச)  
9. பெயிண்ட் வகைகள்                                                                       செம்பு (ஊடியீயீநச) பாதரசம் (ஆநசஉரசல)
    
கடற்கரை சந்திக்கும் மிகப்பெரும் ஆபத்து அனல்மின் நிலையங்களால் தான். அனல்மின்  நிலையங்கள் வெளியேற்றும் ஆற்றுப்படுத்தும் நீர் மற்றும் அதிலுள்ள குளோரினும் கடல் உயிர்ச் சூழலை அழிக்கின்றன. அதோ ஆற்றுப்படுத்தும் நீரின் வெவ்வேறு வகையான வெப்ப நிலை கொண்ட நீரும் அதை வெளியேற்ற அமைக்கப்பட்ட குழாய்களும் கடற்கரை நீரோட்டத்தை சிதைக்கின்றன. இது கடற்கரை அரிப்பை தூண்டுகின்றன.  
ஆற்றுப்படுத்தும் நீர் (உடிடிடயவே றயவநச னளைஉhயசபந) கடலில் கலக்கும் போது 80ஊ  முதல் 100ஊ வரை வெப்பமாற்றம் கடல் நீரில் ஏற்படுகின்றது. இதனால் 370ஊ குறைவில்லாமல் கடல் நீர் வெப்பமடைகின்றது. இது பல உயிரினங்களுக்குள் அழிவுக்கு வழிகோலி கடல் அரிப்பை துரிதப் படுத்துகின்றது. அணு உலைகள் இந்த வகையில் கூட பேராபத்து தான். 
இயற்கையின் இடர்பாடுகளை, செயற்கையான மானுட செயல்கள் நிகழ்த்தும்  அழிவிலிருந்து கடற்கரையைக் காத்து பாதுகாப்பனதாக மாற்ற வேண்டிய சூழல் நிர்பந்தம்  இன்றைக்கு தோன்றியுள்ளது. 

ஒருங்கிணைந்த செயல்பாடுகள் மூலம் கடற்புற நிகழ்வை ஆய்வு செய்ய வேண்டும். (ஐவேநபசயவநன டீஉநயn ளுவரனல)கடற்புற நிகழ்வு ஆய்வு கடல் உயிரினஆய வு,  கடல் அகழ் ஆய்வு, க டல் கிடை நில ஆய்வு, கடல் மண் ஆய்வு, வெப்பநிலை மாற்ற ஆய்வு,  கடல் வழி ஆய்வு, கடல் மாசு ஆய்வு போன்று கடல் சார்ந்த ஆய்வு வெவ்வேறு  நிகழ்த்தப்படுகின்றன. இவை ஒன்றொடு ஒன்று மிகவும் தொடர்புடையவை. இன்றைய  சூழலில்  ஒருங்கிணைந்த ஆய்வும் அதன் தரவுகளின் மீது ஒருங்கிணைந்த பார்வைகளும்,   இல்லாமையால் மரபு ரீதியான செயல்பாடுகள் பற்றி எவ்வித கவனம் கொள்ளப்படாமல்   அறிவியல் பூர்வமான அணுகுமுறையிலிருந்து கடல் பேரிடர்கள் மேலாண்மை வலுவிழந்து நிற்கின்றது. 
கடல் கரை அரிப்பை தடுப்பதற்கு பல்வேறு வழிமுறைகள் தற்பொழுது பின்பற்றப்படுகின்றன. அதில் ஒன்று கருங்கற்களை (சுரbடெந அடிரனே ளுநய றயடட) கொட்டி தடுப்பு சுவர் அமைத்தல். இது அலைகளின் வீரிய சக்தியை  (நுநேசபல னளைளiயீயவந) ஆற்றுப்படுத்தும் வகை தொழில் நுட்பம் சார்ந்தது. ஆனால் இவ்வகை தடுப்புச் சுவர்கள் அலைச் சக்தியை ஆற்றுப்படுத்தாமல் அதை திசை விலகல்  (னiஎநசளகைல) செய்வதால்  தடுப்பு சுவரின் இருபுறமும் பருவம் சார்ந்து கரை அரிப்புள்ளதாகின்றது. இதான் தீர்வுக்கு பதிலாக பிரச்சனை இடமாற்றம் கொள்கிறது. இதற்கு நம்மண்ணில் மரபு ரீதியான தீர்வுகள் உண்டு. எந்த கடற்கரை அலைகளின் வீரிய  தாக்கத்திற்குள்ளாகின்றதோ அங்கே பிறைவடிவ கடல் நீர்  ஆற்றுப்படுத்தும்  வாய்க்கால் (க்ஷயஉமறயவநச உடிரசளந) அமைக்கப்பட்டு கடல் நீர் உட்புகுந்து தன் வீரிய  ஆற்றலை ஆற்றுப்படுத்திக் கொள்ளும் அமைப்பு இருக்கின்றது. இதன் கழிமுகத் துவாரங்களை  மட்டும் மூடாமல் பார்த்துக் கொண்ட ஒரு பணிமட்டுமே இயற்கை இடர் மேலாண்மை தூண்டில் முள் வளைவு (ழுசலடிநே றுயடட) இதே பிரச்சனையை கொண்டு வருகின்றன. இயற்கையோடு இயைந்த கடல் மேலாண்மை நமது மரபாக இருந்து வந்திருக்கின்றன.  

குறிப்பாக ஆமைகள் நமது கடற்பயணத்தின் வழிகாட்டி (சிவ.பாலசுப்ரமணியம்) என்று அழைக்கப்பட்டிருக்கிறது. கடல் ஆமைகள் கடல் நீரோட்டத்தினுடே அதன் வழியே நீந்திச்  செல்லும் இயல்புடையவை இதையறிந்து தமிழர்கள் கடல் நீரோட்டம் அறிந்து கலம் செலுத்திய  பண்மைப் பெற்றிருந்தனர். இந்த கடல் ஆமைகள் கருங்கள் தடுப்புச் சுவர்களில் மோதி தங்கள்  உயிரை இழக்கின்றன. ரசாயனப் பொருட்கள் படிந்த கடல் உணவை உண்டு மடிகின்றன.  இதனால் தமிழகக் கடற்கரைக்கு இனப்பெருக்கத்திற்காக வரும் ஆமைகளின் வரத்து அழிந்து வருகின்றது.சித்தாமை எனப்படும் ஆலிவ்ரெட்லி வைககள் ஆஸ்திரேலியா, நியூஸ்லாந்து பகுதியிலிருந்தும், பச்சை ஆமை எனப்படும் ‘கீரின் டர்டில்ஸ்’  ஜப்பான், பர்மா பகுதியிலிருந்தும்,   கிரிமுக்கு (அ) அலுக்கா ஆமை எனப்படும் ‘அக்ஷாபில்’ வகை ஆமைகள் கிழக்கு ஆப்பிரிக்கா பகுதியிலிரந்து தமிழ் கடற்கரை தேடி வருகின்றன. இங்கு நிலவுகின்ற சூழலுக்கு ஏற்ப இங்கோ  அல்லது ஒரியா கடற்கரைக்கு இடம் பெயர்கின்றன.கடல் ஆமைகள் கடல் ஆய்விற்கு சிறந்த தரவுகளைத் தருகின்றன. அவற்றின் வழித்தடம், அவற்றின் போக்கு, வேகம், முதலியவற்றைக் கொண்டு கடல் நீரோட்டத்தின் திசை, வேகம், பருவம் முதலியவற்றை அறிய முடியும்.   ஆமைகள் கடல் நீரோட்டத்தினோடு நீந்திதான் வேறு கடற்கரையை நோக்கி புலம் பெயர்கின்றன.  பறவைகள் கூட இவ்வகை கடல் ஆய்வுக்கு நமக்கு உதவுகின்றன. இவை மரபு ரீதியான  ஒருங்கிணைந்த கடலாய்வுக்கு உதவுபவகையாகவும் உள்ளன.  

கடந்த முப்பதாண்டுகளாக தமிழகப் பொதுப்பணித்துறையின் பூண்டியில் அமைந்துள்ள,  நீரியிய மற்றும் நீர் நிலையியல் ஆய்வுக் கழகத்தால் திரட்டப்பட்ட தரவுகளின்படி ஆய்வு செய்யும் போது நாம் சராசரியாக 60 மீட்டர் கடற்கரையை இழந்துவிட்டோம். துரிதப்படுத்தப் படுகின்றது என்பதை எனது ஆறு ஆண்டுகால ஆய்வில் உணர்கின்றேன். பொதுப்பணித்துறை மூலம் குறிப்பிட்ட இடங்களைத் தேர்வு செய்து சீரான  கால  இடைவெளியில் திரட்டப்பட்ட தரவுகள் கீழ்கண்ட முடிவுகளை அறிவிக்கின்றன.   

    

வ. எண் இடத்தின் பெயர் இடம் கடற்கரை நீளம் (மீ) கடற்கரை அகலம் (மீ) கடற்கரை அலைப் பரப்பு அலையேற்ற இறக்க விகிதாசாரம் ஆண்டுதோறுமான கடற்கரை அளவு குறிப்பு
அரிப்பு (மீ) கடல் (மீ)
1. தேவனாம்பட்டினம் 100 44’ 61"" 790 47’ 32"" 750 35 10 1.84 0.60 -
2. கடலூர் 110 40’ 99"" 790 46’ 06"" 1538 200 25 1.57 1.50 -
3. பூம்புகார் 110  8’ 08"" 790 51’ 42"" 1905 100 30 2.13 1.50 -
4. தரங்கம்பாடி   110 1’ 28"" 790 51’ 10"" 760 50 10 2.20 1.00 -
5. நாகப்பட்டினம் 110  1’ 81"" 790 51’ 10"" 4270 70 15 2.04 0.50 -
6. வேளாங்கன்னி 100 40’ 95"" 790 51’ 18"" 1549 150 20 2.91 0.70 -
7. கோடியக்கரை 100  17’ 00"" 790 53’ 00"" 966 100 15 2.16 - 6.50
8. அம்மாப்பட்டினம் 100  55’ 15"" 790 13’ 57"" 3700 25 5 2.03 - 0.20
9. நம்புதலை 90  9’ 40"" 780 38’ 54"" 1200 30 5 1.56 - 0.50
10. மண்டபம் 90 17’ 01"" 790 9’ 74"" 2165 30 5 3.15 - 0.35
11. ராமேஸ்வரம் 90 13’ 32"" 790 19’ 61"" 3295 30 8 2.02 - 0.60
12. கீழக்கரை 90 13’ 42"" 790 47’ 12"" 5140 20 5 3.08 - 0.20
13. வாலிநோக்கம் 90 9’ 40"" 790 38’ 54"" 7360 40 10 2.34 - 0.60
சென்னைமுதல் நாகைவரை உள்ள கடற்கரை சராசரியாக ஆண்டு ஒன்றுக்கு 31/2 அடிவீதம்  அரிப்புள்ளாகின்றது. கோடியக்கரை முதல் வாலிநோக்கம் வரை சராசரியாக 11/2 வீதம்  கடற்கரையில் மணல் சேருவதுமாக உள்ளது. ஆனால் கடற்கரை முழுவதும் மாசுபட்ட  கடற்கரையாக உள்ளன.  

எதிர்வரும் தலைமுறைக்கு உலகின் மூன்று பங்கை தனதாக்கி கொண்ட கடலோடு உறவாடி அதை காத்து கடற்கரையை மேலாண்மை செய்து பாதுகாப்பாக ஒப்படைக்க வேண்டிய கடமை  நம்முடையது. அதற்குஒருங்கிணைந்த கடலாய்வு மற்றும் மேலாண்மை  தேவை. இவ்வகையான கூட்டங்கள் அதற்கு உதவும் என நம்புவோமாக. 
#Old chola harbour # Poombhuhar port, # Ancient tamil port # The eroded Poombuhar pattinam.