Thursday, April 9, 2015

எப்படியிருந்த நான் இப்படியாகிட்டேன்.

எப்படியிருந்த நான் இப்படியாகிட்டேன்....!!!

இந்த இராசேந்திரசோழன் ரொம்ப மோசம், என்னை இப்ப்படி பண்ணிட்டார். இவரு அப்பாவும் இப்படித்தான் ஆனாலும் கொஞ்சம் நல்ல மனிதன்.
ஆமாங்க 
நான் சொல்வதில் உள்ள நியாத்தை இதை படிச்சாதான் புரியும்.படைப்புக்கு நான் தான் கடவுள். நான்முகன், பிராஜாபதி, பிரம்மா, விஸ்வகர்மா இப்படி பல பெயரிருந்தாலும் பிரம்மான்னா உடனே புரிஞ்சுடும் எல்லோருக்கும்.

இந்த சிவன், திருமால் எல்லாம் ஏதுங்க?

வேதத்தில நான் தான் கடவுள் அடுத்தது இந்திரன். உடனே திராவிடவரலாற்று ஆராட்சியில் சிந்துவெளிக்கு போயிடாதிங்க, இப்படி பேசியதால் தான் எனக்கிருந்த ஐந்து தலையில ஒரு தலையை சிவன் கிள்ளி எரிஞ்சிட்டார். அன்றிலிருந்து நான்முகனாயிட்டேன். நான்கு திசைக்கும் நான்கு வேதத்திற்கும் ஒவ்வொன்றுக்கும் ஒரு முகம், ஒவ்வொன்றும் வேதத்தை உச்சரிக்கிறது. இந்த முருகன் வேறு பிரணவம் மந்திரம் தெரியவில்லை என்று தலையில் குட்டி கத்து கொடுக்கிறார். கோர்ட், கேசு, பொய் வாக்குமூலம் எல்லோம் நான் தான் ஆரம்பிச்சது உங்கமேல குத்தமில்ல, அன்னைக்கு இந்த தாழம்பூவை வைத்து நான் பொய்சாட்சி சொல்லாமல் விட்டிருந்தால் பெங்களூரு மாதிரி நீளும் வழக்கு இருந்திருக்காது. இன்னும் 466 ஆண்டுகள் வேணும் நீதிமன்றத்தில் தேங்கிகிடக்கும் பணி முடிக்க என் உச்சநீதிமன்ற நீதிபதி புலம்பல் இருந்திருக்காது. பாவம் அந்த தாழ்ம்பூ, அந்த இனமே அருகிவிடும் போலிருக்கு, இப்பொ எல்லாம் மகாசிவராத்திரி நான்காம் காலத்தில் சிவனுக்கு சூட கூட அது கிடைக்க மாட்டேங்கிது, வருஷத்திலே ஒருநாள் ஒரு காலத்திற்கு மட்டுமே அதை சிவனுக்கு சூட்டுகிறார்கள்.

கிராதயுகம், திராதயுகம், துவாபரயுகம், கலியுகம் ஆகிய நான்கு யுகங்களைக் கூட்டினால் நாற்பத்தி மூன்று லட்சத்து இருபதாயிரம் ஆண்டு வரும் இது எனக்கு ஒரு வருஷம் இப்படி நூறு வருஷம் போன அதாவது 43,20,000 X 100 = 43,20,00000. இந்த நாற்பத்தி மூன்று கோடியே இருபது லட்சம் ஆண்டு தான் எனது ஆயுள்.

எனக்கு தனி கோவில் கிடையாது. கும்பகோணத்தில், ராஜஸ்தான் புஷ்கர், நேபாளத்தில் சின்ன சின்னதா வடஇந்தியாவில் கோவில்கள் உண்டு. கும்பகோணத்தில் மூன்று கால புஜை நடக்குது. திருப்பட்டூர்,திருக்கண்டியூர்,உத்தமர்கோயில்,கொடுமுடி,திருநெல்வேலி பிரம்மதேசம், இந்த ஊரில் இருக்கும் சிவன்கோயில்களில் தனி சன்னதிகள் உண்டு.

என்னை சிவன் கோவில் தேவகோட்டத்தில் வடபுரத்தில் அபிஷெக நீர் ஊற்றும் சாளவத்தின் மேல்பாகத்தில் பார்க்க முடியும்.. எனது நின்றகோலம் தான் பெரும்பான்மையான காலத்தின் கலைபாணி. அமர்ந்த கோலம் சில இடத்தில் உண்டு.பல்லவர்கள் என்னை எவ்வளவு அழகாக வடித்தார்கள். சோழர்களில் பல்லவர்பாணியில் ஆதித்தசோழன் காலத்தில் கீழையுரில் ( கி.பி.884 ) எனக்கு அழகான உருவம் கொடுத்து சிலைவடித்தார்கள் பழுவேட்டரையர். எனது முகம் எனது சற்று நீண்ட மகுடத்தால் அழகாக 

தர்மபுரி


நிலவும் சுரண்டல் சமூக அமைப்புக்கு ஏதிராக விழிப்புணர்வு பெற்று அமைப்பாக மக்கள் திரண்ட பகுதி தர்மபுரி.வன்னியர்களும் தலித்துகளும் பெரும்பான்மையாக வாழும் பகுதி, வடமாவட்டங்களில் வன்னியை-தலித் சாதிய மோதல்கள் தீவிரமாக இருந்த காலங்களில் கூட அமைதியாக இருந்த பகுதி. இடதுசாரி தீவிரவாத அரசியலால் திரட்டப்பட்ட மக்களால் இது சாத்தியப்பட்டது. இதுவரை இருபத்தி ஐந்து மேற்பட்ட சாதிமறுப்பு திருமணங்கள் நடந்துள்ளது.இரு சமூக மக்களும் கிட்டதட்ட ஒரே பொருளதார அந்தஸ்தில் வாழும் நிலையைக்காணலாம்.வன்னியர்கள் சிறு உடமையாளர்களகவும் தலித்துகள் பெங்களூர்,ஓசூர் போன்ற இடங்களில் வேலை செய்யும் கூலித்தொழிலாளிகளாகவும் இருக்கின்றனர்.

       வன்னியர்களும் தலித்துகளும் தர்மபுரி மாவட்ட அளவிற்கு அடர்த்தியாக வாழும் அரியலூர், கடலூர் போன்ற வடமாவட்டங்களில் இது போன்ற திட்டமிடப்பட்ட இரு சமுகத்திடையேயான கலவரங்கள் நிகழவில்லை. இது போன்ற காதல் உடன்போக்குகள் சில நடந்து கொண்டுதானிருக்கின்றன. தர்மபுரியில் மட்டும் ஏன் இந்த திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை. இது கிட்டதட்ட நாற்பது நாட்களாக இருந்த பிரச்சனை.சாதிய மோதல்கள் உணர்வின் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை.கண்முடித்தனமான தாக்குதல் குழந்தைகள் கூட தப்புவத்தில்லை, கற்பழிப்புகள், சூறையாடல், தீயிடல் போன்றவை அதன் வெளீப்பாடு.தர்மபுரியில் சூறையாடல்,தீவைத்தலுக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டிருக்கிறது.இதன் பின்ணணியை எப்படி சந்தேகிப்பது. சாதிய அமைப்புகள் தீவிர செயலாற்றியிருக்கின்றன என்ற அளவில்தான் கருதமுடிகிறது.

       அப்பகுதியில் மற்ற மாவட்டங்களில் உள்ள அளவிற்கு சாதி மிக கூர்மையானதாக இல்லை. அம்மாவட்டத்தில் மக்களை சாதி ரீதியாக கூர்மயாக துண்டாட வேண்டிய அவசியம் என்ன? உடன்போக்கான பெண்ணின் தந்தை தற்கொலை செய்து கொள்ளவில்லை கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கூற்று உண்மையா? சாதிய மோதல்கள் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டு ஒழுங்காக நிகத்தப்படும் வன்முறையாக இதுவரை பதிவில்லை அதற்கான சத்தியங்களும் குறைவு.முன்னெப்பொழுதும் இல்லாத அளவிற்கு ஆதிக்க படிநிலையில் மேல் நிலையிலுள்ள சாதி தன் கீழ் உள்ள சாதியை பொருளாதார ரீதியாக அதன் உடமைகளை அழிக்கும் புது வடிவத்தை கைகொண்டிருக்கிறது.

      சாதியும் தீண்டாமையும் நிலைத்து நிற்பதற்கு ஆதாரமாகக் கொண்டுள்ள பரம்பரைத் தொழிற் பிரிவினையும் அவை நிலைத்து நிற்பதற்கான சேவை செய்யும் அகமண முறை, உயர்வு தாழ்வு கற்பித்தல், படிநிலை முறை, பரம்பரை சடங்ககுகள் ஆகியவையாகும்.இது நிலவுடமையின் தன்மை, இந்திய சமூகத்தை எதேச்சதிகாரமிக்கதாக ஆக்குகிறது.இதன் வடிவமாக அரசும் அதன் நிறுவனமும் விளங்குகிறது.இந்த அரசில் பங்குகொள்ளும் கட்சிகளின் தன்மையும் இதைத்தான் பிரதிபலிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது. இதற்கு ஏகபோக மூலதனமும் தன் நலனுக்கு ஆதரவாக அமைகிறது.சாதிய கட்டமைப்பை தக்கவைத்து கொள்ள பரம்பரை தொழிற்பிரிவினையையும் அகமண முறையும் தக்கவைத்துக்கொள்ள வேண்டிய நிர்பந்தம்,நெருக்கடி அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது.

தர்மபுரி தலித் மக்கள் பாரம்பரிய தொழிலில் இருந்து விலகியதும் அகமண முறைக்கு எதிராகவும் மாறியதும் சாதியநிலைக்கு எதிரான அம்சங்கள். ஆக இதிலிருந்து விலகும் மக்களை அந்த கட்டமைப்பில் வைத்து படிநிலையை காத்தால் ஒழிய இந்திய சமூக அமைப்பின் ஏதேச்சதிகாரத்தன்மையை காக்க முடியும்.அரசும் அதன் தன்மையோடு இருக்கும்.இதற்கு சாதிய அமைப்புகள் தேவைப்படுகின்றன.எப்போதும் இல்லாத அளவிற்கு சாதிய அமைப்புகள் சலுகைகளை கோரிக்கையாக வைக்காமல் சாதியஅமைப்பை காக்க வேண்டியதை முன்னிலைப் படுத்துகின்றன.

      இன்றைய காதலும் அதன்படி நிகழ்த்தப்படும் திருமணங்களும் சமூக உணர்வோடு நிகழ்வதில்லை."மனிதகுலத்தின் வாழ்தலே நுகர்தல்தான் என்பதாக கட்டமைக்கப்பட்டதால் நுகர்வின் பன்மடிப்புகள் கொண்ட உலகு படைக்கப்படுகிறது. புறயதார்த்தம் என்று சொல்லப்படுகிற இன்றைய உலகு முதலாளித்துவ சந்தைக்கான ஒன்றாக படைத்து காட்டப்படுகிறது. வாழ்க்கையும் சந்தையும் ஒன்றாகிவிட்ட இந்த சூழலில், மனித உடலின் அடிப்படை உரிமையான வாழ்வும், சாவும் முதலாளித்துவத்தின் முதலீடுகளாக மாற்றப்படுகின்றன. பயன்பாடு என்கிற கருத்தாக்கத்தின் வழியாக, மனித உடல்களின் வாழ்க்கை என்பது பயனுள்ளது-பயனற்றது என்கிற இருமைக்குள் சிக்கவைக்கப்பட்டுள்ளது. பயனற்றது சாவதை ஏற்பதும், பயனுள்ளதை வளர்ப்பதும் என்பதாக மாறியதால், முதலாளித்துவம் முன்வைத்துள்ள லாப-வேட்கைகொண்ட வாழ்வின் பயன்பாட்டிற்கானதாக உடல்கள் மாறின. இவ்வாறு, வாழ்வதற்கான உயிர்-ஆற்றலை, சாவதற்கான உடல்-ஆற்றலாக முதலாளித்துவம் முதலீடு செய்வதே அணுஉலை தொழில்நுட்பத்தின் அடிப்படையாக உள்ளது. அதாவது, மனித உடல்களை சாவிற்காக முதலீடு செய்வதே அரசின் இறையாண்மையாக உள்ளது. ”மரண-உலகை“ (death-worlds) மற்றும் “”வாழும்-சவங்களை” (living-deads) உற்பத்தி செய்வதற்காக பேரழிவு ஆயதங்களை உருவாக்கி தனது இறையாண்மையை நிலைநிறுத்துவதே இன்றைய அரசுகளின் செயல்பாடாக உள்ளது[i]. வாழ்விற்கான ஆற்றலை வணிகமயமாக்கிவிட்டு, சாவிற்கான ஆற்றலை கையகப்படுத்திவிட்டன அரசும் அதன் பின்னுள்ள முதலாளிய சக்திகளும். இச்சூழலில் வாழும் மனிதஉடல்கள் ஒவ்வொன்றும் தன்னை ஒரு வணிகச்சின்னமாக (பிராண்டாக)[ii] முன்வைத்து நுகர்வின் வணிகப்போட்டியில் ஈடுபாடு கொள்ள வைக்கப்படுகிறது."ஜமாலன் கூற்றுப்படி வாழ்தலே நுகர்தல்தான் என்பதாக கட்டமைக்கப்பட்டு விட்டதால் நூகர்தலில் தீவிரத்தன்மையாக காதலும், திருமணங்களும் ஆகிவிட்டது.அதற்கு தகவல் தொடர்புகருவிகள், ஊடாகங்களும் நகரங்களின் வளர்ச்சி, கல்வி நிறுவனங்களின் வணிகத்தன்மை,போக்குவரத்து வாகன வளர்ச்சி பயன்படுகின்றன. நூகர்தலின் தீவிரத்தன்மை நீர்த்தப்பொழுது காதலும்,திருமணமும் தோல்வியில் முடிகிறது.இதனால் காதல் சாதி மறுப்பு சுதந்திரத் திருமணங்கள் எதிர்க்கப்படும் நிலைத் தோன்றியுள்ளது.

      சுதந்திர சீனாவில் தலைவர் மாவோ நிறைவேற்றிய ஆணையை இங்கு வாசிப்பது அவசியமாகிறது.அது 1931-ம் ஆண்டு ஜனவரி 28-ம் நாள் வெளியிடப்பட்டது. அது கூறுகிறது "நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்தின் கீழ் திருமணம் எண்பது காட்டுமிராண்டித்தனமான மனிதத்தன்மையற்ற ஏற்பாட அமைந்துள்ளது.அடக்குமுறையையும்,துன்பத்தையும் ஆண்களைவிடப் பெண்கள் தான் மிக அதிகமாக எதிர்கொள்கின்றனர்.

   தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் புரட்சியில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து எடுத்து வைக்கப்பட்ட முதலடியான ஆண்கள் மற்றும் பெண்களின் பொருளாதார விடுதலையானது திருமண உறவுகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அவற்றை சுதந்திரமானதாகவும் மாற்றுகிறது.இப்போது சோவியத் மாவட்டகளில் திருமணங்கள் சுதந்திரமான முறையில் நடைபெறுகின்றன.சுதந்திரமான தேர்வு தான் ஒவ்வொரு திருமணத்திற்கும் கட்டாயமான அடிப்படை கோட்பாடாக இருக்க வேண்டும்.தங்கள் பிள்ளைகளுக்காக திருமண ஏற்பாடு செய்வதற்கான, அவர்களின் விருப்பத்திற்கு மாறாக கட்டாயப்படுத்துவற்கான பெற்றோரின் அதிகாரம் உள்ளிட்ட ஒட்டுமொத்த நிலபிரபுவத்த முறையும் திருமண ஒப்பந்தங்களில் நடைபெறும் அனைத்து பொருளாதார ரீதியான கொடுக்கல் வாங்கல்களும் இத்தருணத்தில் இருந்து சட்டப்பூர்வமாக ஒழித்துக் கட்டப்படுகிறது..................மணவிலக்குத் தொடர்பானப் பிரச்சனைகளில் பெண்களைப் பாதுகாப்பதும், மணவிலக்குத் தொடர்பான கடமை மற்றும் பொறுப்புகளின் மிகப்பெரிய பகுதிக்கு ஆண்களைப் பொறுப்பாக்க வேண்டியதும் அவசியமாகிறது...."

    உயர்சாதி ஆதிக்கமுறையை எதிர்த்தும் பரம்பரைத் தொழிற்பிரிவினை, அகமணமுறை, படிநிலை முறை, தீண்டாமை ஆகியவற்றிர்க்கு எதிராக பார்பனிய சைவவேளாள உயர்சாதி ஆதிக்கமுறையை எதிர்த்து ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு ஆதரவாக சீர்திருத்தங்களை கோருவது ஒரு முதலாளித்துவ சனநாயக தன்மை கொண்டது. அது அவசியமாகிறது.

1.சாதிய மோதல்களில் ஈடுபடுவோர் மற்றும் வழக்குகளில் உள்ளவர்கள் அரசின் மூலம் கிடைக்கும் சாதிய அடிப்படையிலான சலுகைகளை ( இட ஒதுக்கிடு உட்பட ) உடன் ரத்து செய்ய வேண்டும்.
2..சாதிய மோதல் உட்பட்ட பகுதியின் அரசு நிறுவனத்தின் அங்கமான வருவாய், நீதித்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள், அலுவலர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு குற்றவியல் விசாரணைக்கு             உட்படுத்தப்படவேண்டும்.
3.சாதிய மோதல் நிகழத்திக்கொள்ளும் சாதியமைப்பு  தலைவர்கள் மீது குற்றவியல் வழக்குகள் தொடரப்பட்டு நீதிமன்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். அதுவும் வேறு மாநிலத்தில் நடத்தல் வேண்டும்.
4.சாதிய மோதல் நடக்கும் பகுதியில் அதில் ஈடுபடும் மக்களின் ஒட்டுகள் செல்லாதவைகள் என அறிவிக்க வேண்டும்.
5.காதல் சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்டு குறுகியகாலத்திலேயே மணவிலக்கு கோரும் நிலையில் அதற்கு ஆண்களை பொறுப்பாக்கி இழப்பீடு வழங்க வேண்டும்.
6.காதல் சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்டோருக்கு அரசு பாதுகாப்பளித்து,மாதம் தோருமான ஊக்கத்தோகை வழங்கி அவர்களின் குழந்தைகளுக்கு சிறப்பு சலுகைகள் மற்றும் கல்வி வேலை வாய்ப்புகளில் தனி இட ஓதுக்கிடும் தரப்பட வேண்டும்.
7.சாதிய இருக்கமுள்ள பகுதிகளில் கலப்பு குடியிருப்புகளை நிறுவ வேண்டும்.அதற்கு முனைப்பு காட்டும் ஊராட்சிகளுக்கு சிறப்பு தகுதியளித்து அரசின் நலத்திட்டங்களை அறிவித்து விருதும் வழங்க வேண்டும்.

    இப்படியான சனநாயகக் கோரிக்கைகளை முன்னிலை படுத்துவது அவசியமானது என்பதற்கான உரையாடலைத் தொடருவோம்.

Monday, April 6, 2015

கம்பீரத்தின் பெருமிதம் சாயாவனம்.



சாயாவனம் - கம்பீரத்தின் பெருமிதம்


வாத்தியாரிடம் அடி வாங்கியதை அவமானமாக நினைக்காமல்,

அதை அடையாளமாக எண்ணி

அவர்களை நினைத்துப்பார்க்கும் தலைமுறையை சேர்ந்ததாலோ என்னவோ
தட்சிணாமூர்த்தியை ரொம்பவே பிடிக்கிறது..

வலி நினைவுக்கு வரவில்லை, அதை சுவாரசியமாக ரசிக்கும் சேட்டை எந்த மனோநிலை எனப் புரியவில்லை.

அடிக்க குச்சு ஒடித்து சப்ளை செய்ய தனி மாணவர் உண்டு.

அவர் கொஞ்சம் பொருப்பாய் படிப்பவர்.

அது என்ன சாபமோ குச்சு கொடுத்தவனை விட அதால அடி வாங்கினவன் தான் உருப்பிட்டிருக்கான்.

ஜமாலன் தான் இதை கட்டுடைத்து பிரித்துப்போட்டு ஆராய வேண்டும்.

ஒரு சுகமான சொரியல் கூட அது.

அதுவும் பொம்பளைப் புள்ளைங்க முன்னாடி அடிவாங்கி அதற்காக நமக்கு பரிந்து அவுங்க அனுதாப்படும் போது மறுமுறை வாங்க வேண்டும் என தோன்றும் விருது அது.

தமிழாசிரியர் கு.நாராயணசாமி உழைப்பு என்ற நாணயத்தின் இரு பக்கமும் அவரே,

பள்ளிக்கூடத்தின் முதல் பிரியட் தமிழ்-

நார்காலியில் குத்துகாலிட்டு உட்கார்ந்து கொண்டு அழகாக சொல்லிக்கொடுப்பார்.

ஒரு நாள் இலக்கண வகுப்பு.

எழுத்து மற்றும் அதன் ஓசை பற்றிய பாடம்
.
பாடம் நடத்தி முடிந்தாகி விட்டது. நடத்திய பாடத்தை ஒவ்வொருவரும் ஒரு பத்தியை எழுந்து நின்று உரக்க படிக்க வேண்டும்
.
நண்பன் கோவிந்தராசுவின் முறை வந்தது.

கம்பீரமாக எழுந்து வாசிக்க தொடங்கினான். அடுத்த நிமிடம் தமிழையாவின் புளியன் மிலாரு, ஒ! இதை டிராசிலேட் பண்ணிதான் ஆகனும்-

அது ஒன்னுமில்லை புளியமரத்துக் குச்சி அதுதான் புளியாமிலாரு, ஒடியாமல் நின்னு பேசும்-

அப்படித்தான் அன்று கோவிந்தராசுவிடம் பேசியது.

இன்னைக்கு இருக்கும் ஊடகச்சுதந்திரம் அன்று இருந்தால் அது நல்ல தீனி பத்திரிக்கைக்கு-

மூன்று நாளாச்சி தண்டித்த கொழுக்கட்டை வீக்கம் வடிய-

அப்படியென்ன தப்பு செஞ்சான் என கேட்டால்
 –
அவன் வாங்கின கொழுக்கட்டைக்கு நீங்கள் 100 மார்க்கு போடுவீர்கள்.

வேறு ஒன்றுமில்லை ஒரு வார்த்தையின் நடுவே கத்தரிக்கோலை உட்டுட்டான்.

‘எழுத்தோசையானது” என்பதை நடுவில் பூந்து “எழுத்து தோசையானது” எனப் பிரித்து படித்து விட்டான்
.
ஆகுண்டா...தோசையும் ஆகும் இட்டிலியும் ஆகும், காலையேலே அம்மாவாசை நினைப்பு வந்துட்டுதா?

என கு.நாராயணசாமி தமிழையா அவன் உடம்பில்  புளியாமிலாரால் கொழுக்கட்டை சுட்டு விட்டார்.

அது ஏன் இப்ப நினைப்பு வந்தது எனக் கேட்டால்.....

பூம்புகாருக்கு அருகில் சாயாவனம் என்ற ஊர் உள்ளது. அதை திருசாய்க்காடு என வரலாறு கூறுகிறது. பல்லவவனேஸ்வரம் எனவும் கூறப்படுகிறது. கோட்செங்கச்சோழன் கட்டிய மாடக்கோவில்களில் இதுவும் ஒன்று. பாடல் பெற்ற ஸ்தலம். சோழ மன்னர்களின் கல்வெட்டுகள் அதிகம் உண்டு. இயற்பகை நாயனாரின் இடம்.

பல்லவர்காலத்திய கோவில். சோழர்களால் பொலிவாக்கப்பட்டு இன்று நம்மால் பெயிண்ட் அடுத்து வீணடிக்கப்பட்ட இடம்.

மிக அமையான சூழல்.

ஒரு சிலர் வந்து தான் சிவனை தொந்திரவு செய்கிறார்கள் மற்றவர்கள் கடற்கரை நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றனர்.

ஜோடி ஜோடியா !! எல்லாம் கனல்வரி பாடல் மகிமை. கலைஞரின் ஞான தரிசனம்.

இக்கோவிலில் இருக்கும் தட்சிணாமூர்த்தியை பார்த்து என் தமிழாசிரியர் குத்துகாலிட்டு நார்காலியில் உட்காருவது நினைவுக்கு வந்து விட்டது.

பெரும்பாலும் கோவிலின் முதல் தளத்தில் தெற்குப் புறத்தில் தட்சிணாமூர்த்திக்கு மேலே இப்படி அமர்ந்த கோல சிற்பத்தை பார்க்க முடியும். ஆனல் தேவகோட்டம் எனப்படும் கோவில் வெளிச்சுவரில் காண்பது அபூர்வம்.. Raman Sthapathy Trichy, Sankara Narayanan G  விளக்குவார்.

அடடா என்ன அழகு, ஈர்ப்பு –

முகத்தில் வழிந்தோடும் அமைதி கசடர ஆழக்கற்ற ஆசிரியனுக்கே வாய்க்கும்.


சாயாவனத்தின் மோனதவம் எத்தனை காலத்தை தாண்டி நிற்கிறது நம்மை வரவேற்க-

Sunday, April 5, 2015

வலியுணர்த்தும் திருவிளையாடல் கோமல்.

கோமல்- வலியுணர்த்தும் திருவிளையாடல்.

இன்னைக்கு அந்த டெயில்ஸ் ஒட்டுர வேலையை முடிச்சிடுங்க.,

இல்ல சார் அது முடியாது. ஆறு பாக்ஸ் பன்னென்டுக்கு எட்டு டெயில்ஸ் குறையுது-
தேவையானதை அளந்து தானே வாங்கியது, எப்படி குறஞ்சுது,

கொண்டுவரும் போது டிரன்ஸ்போட்டுலயும் எறக்கும் போதும் உடைந்திருக்கு,
சரி, கடையிலிருந்து சப்ளை செய்ய சொல்லுரேன்,

ஹேலோ, அருண் டெல்ஸ் சோமானியில மாடல் 12 கான்சப்ட் டெயில்ஸ்ல பாடி டெயில்ஸ் ஆறு பாக்ஸ் வேணும்,

சார், ஒரு நிமிஷம் ஸ்டாக் பார்த்து சொல்லுரேன்
,
சாரி சார் அந்த டெயில்ஸ் ஸ்டாக் இல்ல, அந்த டயிப் புரடெக்‌ஷன் நிறுத்திட்டாங்க வேறு யாருகிட்டயாவது ஸ்டாக் இருக்கான்னு செக் பண்ணிட்டு சொல்லுகிறென். வேணுமின்னா அதே மாதிரி மாடல் ஜான்சனில் இருக்கு கலந்து ஒட்டுங்க,பார்த்தா சட்டுன்னு தெரியாது கொஞ்சம் தான் வித்தியாசம் இருக்கும்.

இல்ல சார் அதான் வேணும் கொஞ்சம் வேறு யாரிடமாவது ஸ்டாக் இருக்கான்னு செக் பண்ணுங்க,

ஹேலோ...செல்வம் ஏஜென்சி,,.............இருக்கா ?
ஹேலோ....மாருதி டெயில்ஸ்..............இருக்கா ?
ஹேலோ...நவீன் டெயில்ஸ்.................இருக்கா ?

ஏன்ப்பா இப்படி உயிர வாங்கிருங்க ! ஒருத்தனும் அந்த கல்லு இல்லங்கிரான், பாதிவேளையில இப்படி சொன்னா எப்படி ? இதையெல்லாம் ஆரம்பிக்கிரக்கிரத்துக்கு முன்னாடி சொல்லரது இல்லையா ? இந்த சூப்பிரவைஸ்சர் வேலை செய்யறதுக்கு.....நிம்மதியா உக்காந்து .........லாம்!!!

வேறு எது பண்ணினாலும் சூட்டாகாது, இன்ஜினியர் பார்த்து பார்த்து எடுத்து கொடுத்த டிசைன்....தலையிலதான் அடிச்சுக்கணும்......?

இந்த அனுபவம் உங்களில் சில பேருக்காவது நிகழ்ந்திருக்கும்.
ஒரு சின்ன டெயில்ஸ் விஷயமே இப்படி உலைச்சலில் விடுகிற்து.

அப்பன், பாட்டன், பூட்டன் காலத்தை விட தகவல் தொடர்பும் போக்குவரத்தும் பிரமாண்டமாக வளர்ச்சியடந்து விட்டது.

ஆனால் நினைத்ததை நினைத்தமாதிரி முடிப்பதில் ஆயிரம் சிக்கல்களை சந்திக்கிறோம்.
ஒரு பாக்ஸ் டெயில்ஸ் வாங்குவது அவ்வளவு சிரமமாக இருக்கிறது.

ஆனால்-

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தேவையான பொருளைக் கண்டுபிடித்து அதை பல மைல் தூரத்திற்கு கொண்டு வந்து ஒரு வேளையை முடிப்பது எவ்வளவு கடினம் என்பது விளங்கிக் கொள்ள முடியும்.

பிரசவித்தவளுக்குத் தான் வலி தெரியும்.

பார்த்துப் பார்த்து அடித்த சிலைகள் பாழாகி கிடக்கிறது.

நின்ற கோலம், கிடந்த கோலம் என உருகொண்ட பெருமாள் ஊருக்கு ஒதுக்குப் புறமாக கிடக்கிறது.

மாட்டாஸ்பத்திரிக்கு அஸ்திவாரம் பரித்த போது கிடைத்தது. ரோட்டில கிடந்தது மனசு கேட்காம இப்படி ஓரமா கொண்டு வந்து போட்டிருக்கோம்!

இது பெரிய லிங்கம் கொட்டாப் போட்டு வத்திருக்கோம்.

இது என்னன்னு தெரியலை என்று அமர்ந்த கோல அம்மனைக் காட்டுகிறார்கள்.

ஏரிக்கறையில இருக்கிற கோவில் பெருசு என சிவன் கோவிலைக் காட்டுகிறார்கள்.

ஏன் இப்படியிருக்கு, பராமரிக்க கூடாதா... நாங்க இந்த அளவுக்கு வத்திருப்பதே பெருசு...இது இல்லாதவர்களுடைய உழைப்பு.... இருப்பவர்கள் திருப்பதிக்கும் திருவண்ணாமலைக்கும் போய்விடுகின்றனர்.

கோமல். கும்பகோணம் ஆடுதுறையிலிருந்து எட்டு கி.மீ, தூரத்தில் வீரசோழன் ஆற்றங்கரை அமைந்த ஊர்.இங்கு தான் இக் கோவில்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. ஒரு காலத்தில் மிக சிறந்த பெரிய ஊர்.

வீரசோழன் ஆற்றுக்கும் அரசலாற்றிர்க்கும் இடையே மதுரை நோக்கிப் பயணப்பட்ட மாலிக்காபூரின் படையேடுப்பால் அழிந்து போன கோவில்கள் நிறைய உண்டு.

சமணத்தையும் அதன் உருக்களையும் அழித்த வலியை சைவத்திற்கு உணர்த்திய திருவிளையாட்டு.
இருப்பவர்கள் பழையதை பராமரிக்காமல் புதிய புதிய கோவில் கட்டும் விபத்து அங்கேயும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.