Sunday, May 4, 2025

தொல்காப்பியர் தேவையும் பிறந்தநாள் கொண்டாட்டமும்.......

 

தொல்காப்பியர் தேவையும் பிறந்தநாள் கொண்டாட்டமும்……..

பொறி.இரா.கோமகன், கங்கைகொண்டசோழபுரம்.

தொல்காப்பியம் என்றால் அது தமிழ் இலக்கணநூல் என்று மட்டுமே அறியப்பட்டு புகட்டப்படுகிறது.அது அப்படித்தான் உள்ளதா? எனில் அப்படி இல்லை என்பது தான் அப்பட்டமான உண்மை. தொல்காப்பியத்தை தமிழ் வரலாற்றப் பனுவல், தமிழ் மரபு நூல் எனும் வரையறைக்குள் நிறுத்த வேண்டும்.

மொழியின் விளைவா சமூகம் அல்லது சமூகத்தின் விளைவா மொழி என்றால் மொழிதான் சமூகத்தைக் கட்டமைக்கிறது. மொழி ஒன்றிர்க்கும் மேற்பட்ட உடல்களை இணைத்துகூட்டித் தொகுப்பாக்கி மனிதர்களைச் சமூகமாக்குகின்றது. மொழியில்லாவிட்டாலும் மனிதக் கூட்டம் வாழும், ஆனால் சமூகம் இருக்காது. வாழும் நிலபுலத்தோடான உறவிற்கு மொழிதான் அடிப்படை, மக்கள் தொகுப்பாகிய சமூகம் அது வாழும் நிலபுலனோடு வேர்விட்டு விரிவாக மொழியே முதன்மைக் காரணியாகிறது. சமூக அமைப்புகளின் வளர்ச்சியோடு மொழியும் வளர்ச்சிதை மாற்றம் கொள்கிறது.

மனிதர்கள் தான் வரலாற்றை உருவாக்குகிறார்கள். அந்த மனிதர்களைக்/ கட்டமைப்பது மொழி, மனிதர்களின் நினைவாக இருக்கும் மொழி அதை அனுப மாக்கி செய்தியாகப் பதிவு செய்து தன் செயலியக்கத்தைத் தொடர்தால் வரலாறு எனும் காத்தின் அசைவியக்கத் தொகுப்பு நிலத்தோடு ஊன்றப்பட்டு, நித்தின் உறுப்பாக மனிதர்கள் மாற்றப்படுகின்றனர். புறயமான நிலத்தை மனிதருக்குள் கவயப்படுத்தும் முறையில் தோன்றிய மொழி அதன் தொடர் வினையாற்றலால் நிலத்தின் அகவயமாக மனிதனை மாற்றி விட்டது.

"மொழி என்பது சமூக மேல்கட்டுமானங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. மொழி என்பது பழைய அல்லது புதிய சமூகத்தின் விளைபொருள் அல்ல. மாறாக வரலாற்று ரீதியாக பல நூற்றாண்டுகள் கடந்து வந்த சமூகத்தின் அடிப்படை விளைவாகும்.இது ஒரு சிலரால் அன்றி ஒட்டுமொத்தச் சமூகத்தால் நூற்றுக்கணக்கானத் தலைமுறையினரால் உருவாக்கப்பட்டது. தனித்தொரு பிரிவால் மட்டுமின்றி ஒட்டுமொத்த மக்களின் தேவைகளுக்காகனது.எனவே மொழியின் செயல்பாடு மனிதர்களுக்கு இடையில் உறவை ஏற்படுத்தி ஒரு வர்க்கத்திற்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த சமூகத்திற்கு பொதுவானதாக மொழி அமைந்துள்ளது.உண்மையில் மொழி பழைய, புதிய சமூகஅமைப்பின் கட்டுமானங்களும் மேற்கட்டுமானங்களும் பொதுவானதாக சுரண்டப்படுவோர், சுரண்டுபவர்களுக்குப் பொதுவானதாக அமைந்துள்ளது".(ஜே.வி.ஸ்டாலின்:1950)

காத்தின் அசைவியக்க தொகுப்புதான் வரலாறு. அது நிலத்தோடுடு ஊன்றி நின்று நிம் மனிதனில் அகவயப்படும் நிலையில் பண்பாடு அமைகின்றது. பரம்பரை, தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து ரும் கருத்தமைவுகளின் விரிவாக்க வினையே மன அமைப்புகளைத் தோற்றுவித்து பண்பாடோகிறது. பண்பாட்டைச் சொல்லாடல்கள் கட்டமைக்கின்ற. சொல்லாடல்களுக்கு மொழிதான் முதன்மையானது.

தமிழ்ச்சமூக உருவாக்கம் தமிழ் மொழி வழிதான் நிகழ்த்தப்படுகிறது. அச்சமூக அமைப்பை மாறிவரும் பொருளாதார உறவுகள் மாற்றி வருகிறது. தமிழ் மொழிதான் தமிழ் சமூகத்திற்கு அடிப்படை எனும் பொழுது, அம்மொழியின் இலக்கண, மரபு நூல் தொல்காப்பியம் அச்சமூகத்தின் முதன்மை நூலாகிறது.

"ஒரு மொழியின் இறுதி இலக்கு மனிதனை நிலத்துடன் பிணைப்பதே. மொழியின் முதல் வினையே வெளியே (புறத்தை-இயற்கையை) னிதவயமாக்குவதே (அக வயமாக்குதல்- மனம்). அதாவது புறவெளியை அகவெளியாக்குவதன் மூலம் மனத்தையும், அதன் மூலம் மனிதனையும் கட்டமைத்தல், பின் மனிதனை இடப் டுத்துவதும்  (spatial-being) னது மொழி அலகுகளால் வரலாறு என்கின்ற காலம் பற்றிய நினைவுகளால் அடையாளப்படுத்துவதன் மூலம் காலத்திற்குள் நிறுத்துவதும் (Temporal-being) இடம் காலம் ற்றிய நினைவுகளின் வழியாத்னக்கான் நிலம் ற்றிய வரைபடங்களை நினைவுத் தளத்தில் வரைவதும் பின் அந்த வெல்வதும் நிலத்துடன் பிணைப்பதுவே ஆகும்". (மாலன்:2013: மொழியும் நிலமும் ).

அரசியல் பொருளியல் மாற்றங்களுடே தமிழ்ப்பெரு நிலத்தைக்கட்டமைக்கும் நோக்கத்தின் வெளிப்பாடு தான் தொல்காப்பியம். வேந்தர்களின் எழுச்சியால் தமிழ்ப்பெருநிலம் கட்டமைகிறது. அப்பெருநிலத்தை தமிழ்ச்சமூகத்தோடு இணைக்கும் பணியைச்செய்தது தொல்காப்பியம். தொல்காப்பியம் வழிதான் தமிழ்ப்பெருநிலம் அறியப்படுகிறது. தன்மொழியின் சொற்களை வகைப்படுத்திப் பிறமொழிச்சொற்கள் கலப்பால் தமிழ்மொழியைச் சிதைவிலிருந்து காத்தது தொல்காப்பியம். அதனாலேயே தொல்காப்பியர் தான் முதல் மொழிப்போராளி எனலாம். தொல்காப்பியத்தை தமிழ்காப்பு நூல் எனலாம். எனவே தொல்காப்பியமும் தொல்காப்பியரும் தமிழர்கள் கொண்டாட வேண்டிய முதல் நூலாகும்.

ரந்தைப்புலவர் கல்லூரி, தஞ்சாவூர் / திருவள்ளுவர்கல்லூரி, பாவநாசம், மேனாள் முதல்வரும்; செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் ஆய்வறிஞர். திருமிகு.கு.சிவமணி அவர்களின் “ தொல்காப்பியர் திருநாள் – நினைவலைகள்” எனும் கட்டுரையின் ஒரு பகுதியை இங்கு நோக்கத்த்ருவது சிறப்பாகும்:

"தொல்காப்பியரின் நாளும் காலமும் குறித்துக் கடந்த ஒரு நூற்றாண்டு வரலாற்றில் சிலவற்றை நினைவுகூர்ந்து தொல்காப்பியர் திருநாளை நிலையுறுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம்.

இற்றைக்கு 110 ஆண்டுகளுக்கு முன் நீலகிரி- குன்னூரில் நூலகக் காதலரான தஞ்சை மாவட்டத்துப் பெருநிலக்கிழார் ஒருவர் ஒரு நூலகத்தை நிறுவி அதற்குப் பத்தாயிரம் ரூபாய் நன்கொடை அளித்தார் –அத்துடன், அந்நூலக வளாகத்தில் தொல்காப்பியர் சிலையை  10.9.1911 அன்று நிறுவி  அந்தநாளைத் தொல்காப்பியர் திருநாள் எனக் கொண்டாடினார். அவர் - தமிழ், ஆங்கிலம், சமற்கிருத மொழிகளில் வல்லவர்; இசை, சித்த மருத்துவம், யோகம் முதலாய பலகலைகள் பயின்றவர். அவர்காலத்திய சென்னை மாகாண ஆளுநர் சர். ஆர்தர் லாலி, மாவட்டத் துணையாட்சியர் ஆஸ்டின் போன்ற ஆங்கில ஆட்சியாளர்களின் நெருங்கிய நண்பர்; புதுதில்லியில் 12.12.1911 அன்று ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் முடிசூட்டிக்கொண்டபோது சிறப்பு விருந்தினராகக் குடும்பத்தோடு அழைக்கப்பெற்றவர்; தமது இனத்தைக் குற்றப்பரம்பரைச் சட்டத்திலிருந்து விடுவிக்க வேண்டி மன்னரிடம் நேரடியாக  வாதுரைத்து வெற்றிக்கு வித்திட்டவர்; தமது சிற்றூரில் காரனேசன் நூலகம் என்ற ஒரு பெரிய நூலகத்தை உருவாக்கி, அரிய நூல்களையும் ஓலைச் சுவடிகளையும் திரட்டிக் காத்துப் பின்னாளில் சங்கநூல் பதிப்பித்த டாக்டர்..வே.சாமிநாதையர், ஔவை துரைசாமிப்பிள்ளை, பின்னத்தூர் நாராயணசாமிஐயர் போன்ற பலருக்கும் அவற்றைக் கொடுத்துதவியவர்; சுற்றுப்புறத்துள்ள 50 சிற்றூர்களின் நலம் கருதி ஔடதசாலை அமைத்தவர்; பெரும்புலவர் சோழவந்தான் அரசஞ்சண்முகனார் பிணிநீக்கி உயிர்காத்து அவரது தொல்காப்பியப் பாயிரவிருத்தி நூலைத் தாமே பார்வையிட்டு வெளிட்ட புலமைநலஞ்சான்ற புரவலர்.  அவரே அரித்துவாரமங்கலம் கோபாலசாமி இரகுநாத இராசாளியார் எனும் மாநிதிக் கிழவர். (சிதைந்துள்ள அச்சிலையையும் நூலகத்தையும் தமிழக அரசு பேணிக் காக்கவேண்டும் எனும் தீர்மானத்தைத் திருவள்ளுவர் இலக்குவனார் அரசுக்கு அனுப்பினார்.)

1902இல் தொல்காப்பியம் பற்றிய முதல் கட்டுரையை மதுரைத் தமிழ்ச் சங்கத்துத் செந்தமிழ் இதழில் ரா.இராகவையங்கார் எழுதினார். பின்னர் பி.சா. சுப்பிரமணிய சாத்திரியாரின் தொல்காப்பியச் சொல்லதிகார ஆய்வுக் குறிப்புகள் என்ற ஓர் ஆய்வேட்டுக்குச் சென்னைப் பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்கியது. இவற்றினுடைய நோக்கம் தொல்காப்பியம் சமற்கிருதத்துக்குக் கடன்பட்டது என்பதை நிறுவுவது ஆகும். புலமைப்போர் தொடங்கியது. டாக்டர் சாத்திரியாரின்  ஆய்வை வரிக்கு வரி மறுத்துத் தொல்காப்பியத்தின் தமிழியல் வேர்களைக் கண்டறிந்து கரந்தைத் தமிழ்ச்சங்கத்துத் தமிழ்ப்பொழில் – 21 இதழ்களில் தொடர்கட்டுரைகளை எழுதியவர், தொழில்முறையில் பேராசிரியர் அல்லர், காவல் உதவி ஆய்வாளர்,  மன்னார்குடி நா. சோமசுந்தரம் பிள்ளை. இது இடைக் காலநிலை;  தொல்காப்பியர் காலம் பற்றிக் கருத்து மோதல்கள் இருப்பினும் அவரது நாள் பற்றி இராசாளியாரைத் தவிர, யாரும்அக்கறை கொண்டதாகத் தெரியவில்லை. 20ஆம் நூற்றாண்டு இறுதியில், அதாவது- 1975க்குப் பின், தொல்காப்பியம்- சங்க இலக்கிய ஆய்வுகள் வெறும் ஐந்து விழுக்காட்டுக்குக் கீழ் இருந்தன.

இந்நிலையில் 21ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில்  அதாவது 2004ஆம் ஆண்டில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தோற்றம் பெற்றது. அப்பொழுது தமிழ் முதுகலை மாணவர்கள், ஆய்வியல்நிறைஞர், முனைவர்பட்ட ஆய்வாளர்களிடம் சங்க இலக்கியம் - தொல்காப்பியம் பற்றிய ஆர்வம் பெரிதாக இல்லை. செம்மொழி நிறுவனத்தின் அன்றைய முதல் பொறுப்பலுவலர் பேராசிரியர் க.இராமசாமி அவர்கள் தலைமையில் ஒரு திட்டம் வகுக்கப்பெற்றது. அதற்கிணங்க, ஓர் ஐந்தாண்டுகளில்   ஒரு (3-நாள்), பயிலரங்கம்(10-நாள்) என்ற அளவில் ஏறத்தாழ 300-க்கும் மேற்பட்ட தமிழியல்  நிகழ்வுகள் நடந்தன. நாளொன்றுக்குக் குறைந்தது 5 அறிஞர்கள்.ஏறத்தாழ 1800 நாட்கள், 9000 ஆய்வுரைகள் நிகழ்ந்தன. ஓர் அரங்கத்திற்குத் தொடக்கத்தில்  ஆய்வாளர் எண்ணிக்கை 60,  காலப்போக்கில் 100 என உயர்ந்து 25000 ஆய்வுமாணவர்கள் பயன்பெற்றனர். பயிலரங்க நிறைவுநாளில் ஆய்வாளர் ஒவ்வொரு வருக்கும் 3000 ரூபாய் விலைமதிப்புள்ள சங்க இலக்கியத் தொகுதி அன்பளிப்பாக வழங்கப்பெற்றது. தமிழகம் மட்டுமன்றிக்    கேரளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய அண்டை மாநிலங்களிலுள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில், இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்றன செம்மொழி நிறுவன ஆய்வறிஞர் எனும் நிலையில் கட்டுரையாளர் 60க்கும் மேற்பட்ட நிகழ்வுகளுக்க ஒருங்கிணைப்பாளராக அமைந்து திறம்பட நடத்தினார். இதன் விளைவாக இளம் ஆய்வாளர்களிடையே ஒரு மாபெரும் விழிப்புணர்வுப் புரட்சி ஏற்பட்டு, 2010இல் தொல்காப்பியம் - சங்க இலக்கிய ஆய்வுகள்  வியக்கத்தக்க வகையில் 85 விழுக்காட்டை  எட்டிப் பிடித்தன .

 செம்மொழி நிறுவனம் தொல்காப்பியர் கருத்தரங்கம்/பயிலரங்கம் என்ற வகையில் 40 நிகழ்ச்சிகளை நடத்தியிருந்தது அப்போதெல்லாம் அறிஞர்கள் தொல்காப்பியரின் காலத்தையும் நாளையும் வரையறுக்க வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்தனர். 2009இல் இவ்வேண்டுகோள் மிகவும் வலுப்பெற்ற நிலையில், கோவிலூர்த் திருமடத்தின் ஆதீனகர்த்தர் சீர்வளர்சீர் நாச்சியப்ப தேசிகர் அவர்கள் அதனை முன்மொழியவே, செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் கோவிலூர்த் திருமடத்துடன் இணைந்து 26, 27, 28 செப்டம்பர் 2009 ஆகிய நாட்களில் தொல்காப்பியர் கருத்தரங்கைக் கோவிலூரில் நடத்தியது. சென்னைத் தலைநகர்த் தமிழ்ச்சங்கம் முதல் குமரி மாவட்டத் தமிழ் அமைப்புக்கள் வரை பல்வேறு நிறுவனங்களும், பல்கலைக்கழகம், கல்லூரிகளில் பணியாற்றிய பேராசிரியர்களும் தனிநிலையில் தொல்காப்பிய  அறிஞர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்; 28 பேர் கட்டுரை வழங்கினர்; ஏனையோர் உரை நிகழ்த்தினர்; வேனிற்காலத்தில் புலவர்கள் கூடல் மாநகரில்  ஒருங்கிணைந்து தமிழாய்ந்தனர் என்று கலித்தொகை சுட்டிய மரபுவழக்கத்தை ஒட்டித் தொல்காப்பியர் நாள் சித்திரை முழுமதி நாள்  என்பதில் கருத்தொருமை கொண்டனர்; ஆனால் தொல்காப்பியர் காலத்தில் அன்று. கிமு ஏழாயிரம் முதல் கிமு நூறு வரை எனக் கருத்து வேறுபாடு இருந்தது. பொதுக்கருத்து அடிப்படையில் தீர்மானத்துக்கு அறுதி வடிவம் கொடுக்க இரவு 9மணிக்கு அமர்ந்த தமிழண்ணலும் கட்டுரையாளரும் அவ்விளக்கத்தை எழுதிமுடித்தபோது விடியல் கோழி கூவிற்று. 8 பக்கம் கொண்ட அந்தத் தீர்மானம்(ப.1) + விளக்கம்(ப.7) ஆகியவற்றைத் தமிழண்ணல் 20 மணித்துளிகள் படித்து முன்மொழிந்தார்; கட்டுரையாளர் அதனை வழிமொழிகையில் நிறைய வினாக்கணைகள் தொடுக்கப்பட்டதால் அவற்றிற்கெல்லாம் விடைகூறுதற்கு  ஒன்றரை மணிநேரம் பிடித்தது. நிறைவாக, ஆய்வாளர்கள் தொல்காப்பியர் காலத்தைப் பொறுத்து அவரவர் கருத்தையே கொண்டாலும், கீழ்எல்லை 711 என்றும், தொல்காப்பியர் நாள்  சித்திரை முழுநிலவுநாள் என்றும்  ஒப்புகை செய்தனர்.

இந்நிகழ்வில் தொல்காப்பியர் நாளாக சித்திரை முழுநிலவு நாளை தேர்வுசெய்தமைக்கு அடிப்படையாக அந்நாள் இளங்கோவடிகள் முன்னிருத்திய இந்திரவிழாவின் இறுதிநாள் என்பதாலும், உலகமுழுவதும் அன்றைய நாள் “புத்தபூர்ணிமா” என புத்தர் பிறந்தநாளாக கொண்டாடப்படுவதாலும், தமிழகத்தில் அந்நாள் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது என விளக்கம் அளிக்கப்பட்டது. இதற்கு மாற்றாக சித்திரை முதல் நாளை அவரது பிறந்த நாளாகக கொண்டாட வேண்டும் என பெரும்பாலானத் தமிழறிஞர்கள் கூறும் கருத்தும் உண்டு.

தமிழறிஞர் தமிழண்ணல் அவர்கள் 2012-ம் ஆண்டு தினமணி நாளேட்டில் சித்திரை முதல்நாளை தொல்காப்பியர் பிறந்தநாளாக அறிவிக்க வேண்டும் என கட்டுரை எழுதினார். அதை வழிமொழிந்தார்.  பேரா.சே.வை.சண்முகம், அறிஞர்.கு.சிவமணி, யாழ்பாணம் பேரா.ஆ.வேலுப்பிள்ளை, பேரா.கு.நாச்சிமுத்து, முனைவர், நாசா.கணேசன் ஆவார்.

2019-2020 ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கை எண்-46-ன் போது மாண்புமிகு அமைச்சர் திரு.மஃபா.பாண்டியராசன் அவர்கள் தொல்காப்பியர் பிறந்தநாளாக சித்திரை முழுநிலவுநாளை அறிவித்து அதைக் கொண்டாட வழி செய்தார். தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை, தனது அரசாணை எண்: 148, நாள்:15.11.2019, விகாரி, ஐப்பசி-29, திருவள்ளுவர் ஆண்டு-2050-ன் படி சித்திரை முழுநிலவு நாளை தொல்காப்பியர் பிறந்தநாளாகக் கொண்டாட அரசு ஆணை வழங்கியது.

அவ்வாணையின் படி, சித்திரை முழுநிலவு நாளில் சென்னைப் பல்கலைக்கழக மெரினா வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள தொல்காப்பியர் சிலைக்கும் மற்றும் கன்னியாக்குமரி மாவட்டத்தில்  காப்பியக்காட்டில் நிறுவப்பட்டுள்ள தொல்காப்பியர் சிலைக்கும் மலர்தூவி மாலை அணிவித்து சிறப்பு செய்ய சிலை ஒவ்வொன்றிர்க்கும் ரூபாய் 3000-/- என இருசிலைகளுக்கும் தொடர் செலவினமாக ரூ.60000-/- வழங்கி ஆணையிட்டுள்ளது.



ஆனால் இந்நிகழ்வு “பத்தோடு பதினொன்று அத்தோடு இது ஒன்று” என முடிந்துவிடுகிறது. ஊடகங்கள் இதை முதன்மைப்படுத்தி செய்தியாக ஆக்கின்றனவா? என  கேள்வி எழுகிறது.

இராசராசசோழனுக்கும் இராசேந்திரசோழனுக்கும் அகவைநாளில் அரசுவிழா எடுப்பதை விட மிக கூடுதல் கவனத்துடன் சிறப்பாகக் கொண்டாட வேண்டிய நாள் தொல்காப்பியர் பிறந்தநாளாகும். உலகு அதிரக்கொண்டாட வேண்டிய நாளை “இராண்டாம் பேருக்குத் தெரியாமல்” முடிந்து போகிறது. இன்றைய காலம் தமிழையும் தமிழ்நிலத்தையும் அதன் தொல்காப்பியர் நிலைநின்று அவர் வழியில் காக்க வேண்டிய அவசரநிலை நிலவுகிறது.

·      தமிழக அரசு தொல்காப்பியத்தை மிகப்பரவலாக்க வேண்டும்.

·      தொல்காப்பியம் கற்றலை ஊக்குவிக்க வேண்டும்.

·      தொல்காப்பியத்தையும் அதன் உரைகளையும் மலிவுவிலைப் பதிப்பாக்க வேண்டும்.

·  தொல்காப்பியர் பிறந்தநாள் முக்கியமற்ற வகையில் முடிந்து போவதைத் தவிர்த்து அதை அரசுவிழாவாக அறிக்க வேண்டும்.அதை பொதுவிழாவாக்க வேண்டும்.

                                      சித்திரை முழுநிலவு நாள் சிறக்குமா?

Friday, May 2, 2025

 

மேற்கத்திய கார்ட்டீசிய தர்க்கவாதத்தின் வரலாற்றுப் பார்வை

அறிமுகம்:

 

மேற்கத்திய சிந்தனையின் வரலாற்றில், பகுத்தறிவு (Reason) எப்போதும் ஒரு மையமான இடத்தைப் பிடித்துள்ளது. குறிப்பாக, 17 ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சு தத்துவஞானியும் கணிதவியலாளருமான ரெனே டெக்கார்ட்டின் (René Descartes) எழுச்சியுடன், பகுத்தறிவின் பங்கு ஒரு புதிய, புரட்சிகரமான முக்கியத்துவத்தைப் பெற்றது. டெக்கார்ட்டின் தத்துவமான கார்ட்டீசிய தர்க்கவாதம் (Cartesian Rationalism), அறிவின் அடித்தளங்கள், யதார்த்தத்தின் தன்மை மற்றும் மனிதனின் இடம் பற்றிய பாரம்பரியக் கருத்துக்களை ஆழமாகக் கேள்விக்குள்ளாக்கியது. இது அறிவு மற்றும் உண்மையைப் பற்றிய நமது புரிதலை செய்ய முயன்றது. இந்த தத்துவப் புரட்சி, தத்துவம் மற்றும் கணிதத்துடன் நின்றுவிடாமல், அறிவியல், இறையியல் மற்றும் குறிப்பாக வரலாற்று ஆய்வு உள்ளிட்ட பல்வேறு அறிவுத் துறைகளிலும் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த அறிக்கை, கார்ட்டீசிய தர்க்கவாதத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் மற்றும் அதன் முக்கிய அம்சங்களை விளக்குவதோடு, இந்த தத்துவப் பார்வை மேற்கத்திய வரலாற்றுச் சிந்தனையை எவ்வாறு பாதித்தது, அதன் விளைவாக உருவான வரலாற்று எழுத்துமுறையின் பண்புகள் என்ன, மற்றும் இந்த அணுகுமுறை மற்ற வரலாற்றுப் பார்வைகளிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது என்பதை விரிவாக ஆராய்கிறது. இறுதியாக, கார்ட்டீசிய தர்க்கவாதக் கண்ணோட்டத்தில் வரலாறு எவ்வாறு பார்க்கப்படுகிறது அல்லது வரையறுக்கப்படுகிறது என்பதைத் தொகுத்துரைக்கும்.

பகுதி 1: கார்ட்டீசிய தர்க்கவாதம் - வரையறை மற்றும் முக்கிய அம்சங்கள்

கார்ட்டீசிய தர்க்கவாதம் என்பது ரெனே டெக்கார்ட்டின் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சிந்தனைப் பள்ளியாகும். இது அறிவைப் பெறுவதில் பகுத்தறிவின் முதன்மையை வலியுறுத்துகிறது. டெக்கார்ட்டின் தத்துவத்தின் மையக் கருத்துக்களைப் புரிந்துகொள்வது, அது வரலாற்றுச் சிந்தனையில் ஏற்படுத்திய தாக்கத்தைப் புரிந்துகொள்வதற்கு அவசியமாகும்.

1.1   பகுத்தறிவின் முதன்மை (Primacy of Reason)

 

டெக்கார்ட்டின் தத்துவத்தின் மைய அச்சாக விளங்குவது பகுத்தறிவின் மீதான அவரது அசைக்க முடியாத நம்பிக்கை ஆகும்.1 அவர் அறிவின் உண்மையான மற்றும் நம்பகமான ஒரே ஆதாரமாக பகுத்தறிவைக் கருதினார். புலன் அனுபவங்கள் (sensory experiences) பெரும்பாலும் நம்மை ஏமாற்றக்கூடியவை என்றும், அவை தோற்ற மயக்கங்களுக்கும் தவறான புரிதல்களுக்கும் வழிவகுக்கும் என்றும் டெக்கார்ட் வாதிட்டார்.1 உதாரணமாக, தொலைவில் உள்ள கோபுரம் சதுரமாகத் தோன்றலாம், ஆனால் அருகில் செல்லும்போது அது வட்டமாக இருக்கலாம்; நீரில் மூழ்கியிருக்கும் குச்சி வளைந்ததாகத் தோன்றலாம், ஆனால் உண்மையில் அது நேராகவே இருக்கும். இத்தகைய அனுபவங்கள் புலன்களின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்குகின்றன.

இதற்கு மாறாக, கணிதம் போன்ற துறைகளில், புலன் அனுபவங்களின் உதவி இல்லாமலேயே, பகுத்தறிவின் மூலம் மட்டுமே சந்தேகத்திற்கு இடமில்லாத, நிச்சயமான அறிவை அடைய முடியும் என்று டெக்கார்ட் கண்டார்.1 2+2=4 போன்ற கணித உண்மைகள் அல்லது ஒரு முக்கோணத்தின் கோணங்களின் கூட்டுத்தொகை 180 டிகிரி என்பது போன்ற வடிவியல் உண்மைகள், புலன் அனுபவத்தைச் சாராமல், பகுத்தறிவின் மூலமே நிறுவப்படுகின்றன. எனவே, எல்லா அறிவிற்கும் உண்மையான அடித்தளமாக பகுத்தறிவே இருக்க வேண்டும் என்று அவர் முடிவு செய்தார்.

டெக்கார்ட்டின் பார்வையில், மனித மனம் சில அடிப்படை உண்மைகளை அல்லது கருத்துக்களை உள்ளார்ந்ததாகக் (innate ideas) கொண்டுள்ளது.1 கடவுள், ஆன்மா, கணித மற்றும் தர்க்கரீதியான அடிப்படைக் கொள்கைகள் போன்ற கருத்துக்கள் அனுபவத்திலிருந்து பெறப்படுபவை அல்ல, மாறாக அவை நமது பகுத்தறிவின் கட்டமைப்பிலேயே பொதிந்துள்ளன. இந்த உள்ளார்ந்த கருத்துக்களிலிருந்தும், தர்க்கரீதியான அனுமானங்களிலிருந்தும் (deduction) மற்ற எல்லா அறிவையும் பெற முடியும் என்று அவர் நம்பினார். இது, அறிவின் இருப்பிடம் புற உலகிலிருந்து (external world) அக உலகிற்கு, அதாவது சிந்திக்கும் மனதிற்கு (mind) மாற்றப்படுவதைக் குறிக்கிறது. அறிவு என்பது வெளியில் இருந்து பெறப்படும் தகவல்களின் தொகுப்பு என்பதை விட, மனதின் உள்ளார்ந்த திறன்களால் கட்டமைக்கப்படும் ஒரு அமைப்புமுறையாகும். இந்த பகுத்தறிவுவாத நிலைப்பாடு, அறிவின் ஆதாரமாக புலன் அனுபவத்தை வலியுறுத்தும் அனுபவவாதத்திற்கு (Empiricism) நேரெதிரானது.5

 

1.2   முறைப்படுத்தப்பட்ட சந்தேகம் (Methodical Doubt)

 

டெக்கார்ட் தனது தத்துவ அமைப்பை முற்றிலும் உறுதியான, சந்தேகத்திற்கு இடமில்லாத அடித்தளத்தின் மீது கட்டியெழுப்ப விரும்பினார்.1 இந்த நோக்கத்திற்காக, அவர் "முறைப்படுத்தப்பட்ட சந்தேகம்" (Methodical Doubt) என்ற ஒரு தனித்துவமான வழிமுறையைப் பயன்படுத்தினார்.1 இது ஒரு தீவிரமான ஐயுறவுவாத (skepticism) நிலைப்பாடு அல்ல; மாறாக, சந்தேகிக்க முடியாத உண்மையை அடைவதற்கான ஒரு கருவி அல்லது வழிமுறையாகும்.3

இந்த முறையின்படி, எந்தவொரு நம்பிக்கையையும், அதில் மிகச் சிறிய சந்தேகத்திற்குக் காரணம் இருந்தாலும், அதைத் தற்காலிகமாகப் பொய்யானது என்று கருதி ஒதுக்கிவிட வேண்டும்.3 டெக்கார்ட் தனது சந்தேகத்தை மூன்று நிலைகளில் விரிவுபடுத்தினார் 3:

1.       புலன்களின் நம்பகத்தன்மை: நமது புலன்கள் சில சமயங்களில் நம்மை ஏமாற்றுவதால், அவை மூலம் பெறப்படும் அறிவை முழுமையாக நம்ப முடியாது.

2.       கனவு வாதம் (Dream Argument): நாம் காணும் கனவுகள் விழித்திருக்கும்போது பெறும் அனுபவங்களைப் போலவே உண்மையானதாகத் தோன்றுகின்றன. நம்மால் எப்போதும் உறுதியாக நாம் விழித்திருக்கிறோமா அல்லது கனவு காண்கிறோமா என்று சொல்ல முடியாது. எனவே, நமது தற்போதைய அனுபவங்கள் அனைத்தும் ஒரு கனவாக இருக்கலாம்.

3.       தீய சக்தி கருதுகோள் (Evil Demon Hypothesis): ஒருவேளை, நம்மை ஏமாற்றுவதையே நோக்கமாகக் கொண்ட ஒரு சர்வ வல்லமையுள்ள தீய சக்தி (evil demon or malicious genius) இருக்கலாம். அந்த சக்தி, 2+2=4 போன்ற மிக அடிப்படையான கணித உண்மைகளைக் கூட தவறாக நம்பும்படி நம்மை ஏமாற்றக்கூடும்.

இந்த மூன்று நிலைகளின் மூலம், டெக்கார்ட் தனது புலன் உணர்வுகள், உடல் இருப்பு, மற்றும் கணித உண்மைகள் உட்பட கிட்டத்தட்ட தனது அனைத்து முந்தைய நம்பிக்கைகளையும் சந்தேகத்திற்கு உள்ளாக்கினார். இதன் நோக்கம், எல்லாவற்றையும் நிராகரித்துவிட்டு அவநம்பிக்கையில் மூழ்குவதல்ல. மாறாக, இந்தச் சந்தேகத்தின் கடுமையான சோதனையைத் தாங்கி நிற்கக்கூடிய, முற்றிலும் சந்தேகிக்க முடியாத ஒரு உண்மையைக் கண்டுபிடிப்பதே ஆகும்.3

இந்த முறைப்படுத்தப்பட்ட சந்தேகம் என்பது, பழைய, உறுதியற்ற அடித்தளங்களைக் கொண்ட ஒரு கட்டிடத்தை இடித்துவிட்டு, முற்றிலும் உறுதியான பாறையின் மீது ஒரு புதிய கட்டிடத்தை எழுப்புவதைப் போன்றது. சந்தேகிக்கக்கூடிய அனைத்தையும் அகற்றுவதன் மூலம், டெக்கார்ட் அறிவிற்கான ஒரு அசைக்க முடியாத தொடக்கப் புள்ளியைத் தேடினார். அந்தப் புள்ளியிலிருந்து, பகுத்தறிவின் மூலம் மற்ற உண்மைகளைத் தர்க்கரீதியாக நிறுவ முடியும் என்று அவர் நம்பினார். எனவே, சந்தேகம் என்பது ஒரு முடிவல்ல, அது உறுதியான அறிவை நோக்கிய பயணத்தின் முதல் படி, ஒரு வழிமுறை (method) ஆகும்.

1.3 "நான் சிந்திக்கிறேன், ஆகையால் நான் இருக்கிறேன்" (Cogito ergo sum)

முறைப்படுத்தப்பட்ட சந்தேகத்தின் தீவிரமான செயல்முறையின் முடிவில், டெக்கார்ட் தனது முதல் மற்றும் மறுக்க முடியாத உண்மையைக் கண்டடைந்தார்: "நான் சிந்திக்கிறேன், ஆகையால் நான் இருக்கிறேன்" (Cogito ergo sum).1 லத்தீன் மொழியில் "Cogito, ergo sum" என்றும், பிரெஞ்சு மொழியில் "Je pense, donc je suis" என்றும் இது அறியப்படுகிறது.16

டெக்கார்ட்டின் வாதம் எளிமையானது ஆனால் ஆழமானது. அவரால் தனது புலன்களின் நம்பகத்தன்மையை, தனது உடலின் இருப்பை, ஏன் கணித உண்மைகளைக்கூட சந்தேகிக்க முடிந்தது. ஆனால், அவர் சந்தேகிக்கும் அந்தச் செயல் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை அவரால் சந்தேகிக்க முடியவில்லை.14 சந்தேகிப்பது என்பது ஒரு வகையான சிந்தனை. சிந்தனை நிகழ வேண்டுமானால், சிந்திப்பதற்கு ஒரு நபர் அல்லது ஒரு பொருள் இருக்க வேண்டும்.15 எனவே, அவர் சந்தேகிக்கும் (சிந்திக்கும்) அந்த தருணத்திலேயே, அவர் (சிந்திக்கும் ஒரு பொருளாக) இருக்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மை ஆகிறது. "நான் சந்தேகிக்கிறேன், ஆகையால் நான் இருக்கிறேன்" (Dubito, ergo sum) என்றும் இதை அவர் குறிப்பிட்டார்.16

டெக்கார்ட், இந்த "Cogito"வை ஒரு தர்க்கரீதியான அனுமானத்தின் (syllogism) முடிவு என்பதை விட, ஒரு உடனடி உள்ளுணர்வின் (immediate intuition) வெளிப்பாடு என்று கருதினார்.14 அதாவது, "எது சிந்திக்கிறதோ அது இருக்கிறது; நான் சிந்திக்கிறேன்; ஆகையால் நான் இருக்கிறேன்" என்ற படிப்படியான தர்க்கத்தை விட, "நான் சிந்திக்கிறேன்" என்ற விழிப்புணர்வு ஏற்பட்டவுடனேயே, "நான் இருக்கிறேன்" என்ற உண்மை நேரடியாகவும் உடனடியாகவும் தெளிவாகிறது. நான் சிந்திக்கும் ஒவ்வொரு முறையும், "நான் இருக்கிறேன்" என்ற கூற்று உண்மையாகிறது.15

இந்த Cogito, டெக்கார்ட்டின் தத்துவத்திற்கு அசைக்க முடியாத அடித்தளத்தை வழங்கியது. இது அறிவின் தொடக்கப் புள்ளியை புற உலகிலிருந்து அக உலகிற்கு, அதாவது சிந்திக்கும் 'நான்' (the thinking self) அல்லது அகநிலைக்கு (subjectivity) மாற்றியது. புற உலகத்தைப் பற்றிய நமது அறிவு நிச்சயமற்றதாக இருக்கலாம், ஆனால் நமது சொந்த மனதின் இருப்பு மற்றும் அதன் சிந்தனைச் செயல்பாடு ஆகியவைதான் அறிவின் முதல் மற்றும் உறுதியான பற்றுக்கோடு என்று Cogito நிறுவியது. இது நவீன தத்துவத்தில் அகநிலைவாதத்தின் (subjectivism) தொடக்கமாகவும் கருதப்படுகிறது.

1.3   தெளிவான மற்றும் தனித்துவமான கருத்துக்கள் (Clear and Distinct Ideas)

 

Cogito என்ற உறுதியான அடித்தளத்தைக் கண்டறிந்த பிறகு, டெக்கார்ட் மற்ற உண்மைகளை எவ்வாறு நிறுவுவது என்ற கேள்விக்குத் திரும்பினார். Cogito ஏன் சந்தேகத்திற்கு இடமில்லாததாக இருக்கிறது? ஏனெனில் அது மனதிற்கு மிகவும் தெளிவாகவும் தனித்துவமாகவும் (clearly and distinctly) தெரிகிறது என்று அவர் உணர்ந்தார். இதிலிருந்து, அவர் உண்மைக்கான ஒரு பொதுவான அளவுகோலை உருவாக்கினார்: நாம் எதை மிகத் தெளிவாகவும் தனித்துவமாகவும் உணர்கிறோமோ, அது உண்மையாக இருக்க வேண்டும்.1

"தெளிவான" (clear) கருத்து என்பது மனதிற்கு நேரடியாகவும் வெளிப்படையாகவும் இருப்பது, அதன் மீது கவனம் செலுத்தும்போது உடனடியாகப் புலப்படுவது.20 "தனித்துவமான" (distinct) கருத்து என்பது மற்ற எல்லா கருத்துக்களிலிருந்தும் துல்லியமாக வேறுபடுத்தப்பட்டு, அதன் கூறுகளில் எந்தவிதமான குழப்பமும் இல்லாமல், அதன் எல்லைகள் தெளிவாக வரையறுக்கப்பட்டிருப்பது.19 ஒரு கருத்து தெளிவாக இருக்கலாம் ஆனால் தனித்துவமாக இல்லாமல் இருக்கலாம். உதாரணமாக, கடுமையான வலியை உணரும்போது, அந்த உணர்வு தெளிவாக இருக்கிறது, ஆனால் அது எதனால் ஏற்படுகிறது அல்லது அதன் உண்மையான தன்மை என்ன என்பது பற்றிய நமது தீர்ப்பு குழப்பமாக இருக்கலாம், எனவே அது தனித்துவமானதாக இருக்காது.21

கணித மற்றும் தர்க்கரீதியான உண்மைகள் (எ.கா., ஒரு முக்கோணத்திற்கு மூன்று பக்கங்கள் உண்டு), தனது சொந்த இருப்பு (Cogito), மற்றும் கடவுளின் இருப்பு போன்ற கருத்துக்கள் தெளிவாகவும் தனித்துவமாகவும் உணரப்படக்கூடியவை என்று டெக்கார்ட் நம்பினார்.2

இருப்பினும், ஒரு கருத்து தெளிவாகவும் தனித்துவமாகவும் தோன்றினாலும், ஒரு தீய சக்தி நம்மை ஏமாற்றக்கூடும் என்ற சந்தேகம் எஞ்சியிருந்தது. இந்த சந்தேகத்தை நீக்க, டெக்கார்ட் கடவுளின் இருப்பை நிறுவ முயன்றார். கடவுள் என்பவர் ஒரு பரிபூரணமான உண்மை என்றும், பரிபூரணமான உண்மை ஏமாற்றுபவராக இருக்க முடியாது என்றும் அவர் வாதிட்டார்.23 எனவே, கடவுள் நமக்கு வழங்கிய பகுத்தறிவு, தெளிவாகவும் தனித்துவமாகவும் எதை உணர்கிறதோ, அது உண்மையாக இருக்க வேண்டும் என்று கடவுளே உத்தரவாதம் அளிக்கிறார்.2 இதனால், தெளிவான மற்றும் தனித்துவமான கருத்துக்கள் வெறும் அகநிலை உணர்வுகள் அல்ல, அவை புறநிலை உண்மையின் நம்பகமான குறிகாட்டிகள் என்று டெக்கார்ட் நிறுவினார்.

இந்த "தெளிவு மற்றும் தனித்துவம்" என்பது வெறும் உளவியல் சார்ந்த உணர்வுநிலை அல்ல. அது ஒரு கருத்தின் தர்க்கரீதியான கட்டமைப்பு மற்றும் அதன் வரையறையின் துல்லியத்தையும் உள்ளடக்கியது.20 ஒரு கருத்து தர்க்கரீதியாக முரண்பாடற்றதாகவும், அதன் கூறுகள் தெளிவாக வரையறுக்கப்பட்டதாகவும் இருந்தால் மட்டுமே அது தெளிவாகவும் தனித்துவமாகவும் கருதப்படும். கடவுளின் உத்தரவாதம் இந்த தர்க்கரீதியான கட்டமைப்பின் உண்மைத்தன்மையை உறுதி செய்கிறது.

1.4   மனம்-உடல் இருமைவாதம் (Mind-Body Dualism)

 

டெக்கார்ட்டின் தத்துவத்தின் மிகவும் பிரபலமான மற்றும் விவாதத்திற்குரிய அம்சங்களில் ஒன்று அவரது மனம்-உடல் இருமைவாதம் (Mind-Body Dualism) ஆகும்.1 இதன்படி, பிரபஞ்சம் இரண்டு அடிப்படை வகையான பொருட்களால் ஆனது: மனம் (mind) மற்றும் உடல் (body). இவை இரண்டும் முற்றிலும் வேறுபட்ட இயல்புகளைக் கொண்டவை மற்றும் ஒன்றிலிருந்து மற்றொன்று சுயாதீனமாக இருக்கக்கூடியவை.

  • மனம் (Res Cogitans - சிந்திக்கும் பொருள்): மனதின் சாராம்சம் சிந்தனை (thought) ஆகும். இது உணர்வு, புரிதல், சந்தேகம், உறுதிப்படுத்துதல், மறுத்தல், விரும்புதல், வெறுத்தல், கற்பனை செய்தல் மற்றும் உணர்தல் போன்ற அனைத்து நனவான செயல்முறைகளையும் உள்ளடக்கியது. மனம் இடத்தைப் பிடிப்பதில்லை (non-extended), அதை அளக்கவோ, பிரிக்கவோ முடியாது. அது ஒரு பொருள் அல்லாத, ஆன்மீக யதார்த்தம்.1
  • உடல் (Res Extensa - நீட்சிப் பொருள்): உடலின் (மற்றும் அனைத்து பௌதிகப் பொருட்களின்) சாராம்சம் நீட்சி (extension) ஆகும். அதாவது, அது நீளம், அகலம், உயரம் ஆகியவற்றைக் கொண்டு, முப்பரிமாண வெளியில் இடத்தைப் பிடிக்கிறது. உடல் பிரிக்கப்படக்கூடியது, அளவிடக்கூடியது மற்றும் இயக்கத்தின் விதிகளுக்கு உட்பட்டது. டெக்கார்ட் உடலை ஒரு சிக்கலான இயந்திரமாகப் பார்த்தார், அதன் செயல்பாடுகளை இயந்திரவியல் விதிகளின் மூலம் விளக்க முடியும்.1

 

இந்த இருமைவாதத்தை டெக்கார்ட் தனது தெளிவான மற்றும் தனித்துவமான கருத்துக்களின் அடிப்படையில் நிறுவினார்.25 மனதை ஒரு சிந்திக்கும், நீட்சியற்ற பொருளாகவும், உடலை ஒரு நீட்சி உடைய, சிந்தனையற்ற பொருளாகவும் அவரால் தெளிவாகவும் தனித்துவமாகவும் சிந்திக்க முடிந்தது. மேலும், உடல் பாகங்களாகப் பிரிக்கப்படக்கூடியது, ஆனால் மனம் (சிந்தனை) அவ்வாறு பிரிக்கப்பட முடியாதது என்றும் அவர் வாதிட்டார்.25

இந்தக் கோட்பாடு ஒரு பெரிய சிக்கலை எழுப்பியது: மனம்-உடல் சிக்கல் (Mind-Body Problem). முற்றிலும் வேறுபட்ட இயல்புடைய இந்த இரண்டு பொருட்களும் எவ்வாறு ஒன்றோடொன்று தொடர்பு கொள்கின்றன? உடல் ரீதியான நிகழ்வுகள் (கால் தடுமாறுவது) மனரீதியான உணர்வுகளை (வலியை உணர்வது) எவ்வாறு ஏற்படுத்துகின்றன? மனரீதியான முடிவுகள் (கையை உயர்த்த நினைப்பது) உடல் ரீதியான செயல்களை (கையை உயர்த்துவது) எவ்வாறு விளைவிக்கின்றன? டெக்கார்ட் இந்த தொடர்புக்கு மூளையில் உள்ள பீனியல் சுரப்பியை (pineal gland) காரணமாகக் கூறினார், இது ஆன்மா உடலுடன் தொடர்பு கொள்ளும் இடம் என்று அவர் கருதினார்.25 இருப்பினும், பொருள் அல்லாத மனம், பொருள் ரீதியான சுரப்பியுடன் எவ்வாறு தொடர்பு கொள்ள முடியும் என்பது திருப்திகரமாக விளக்கப்படவில்லை.

டெக்கார்ட்டின் இருமைவாதம், மனிதனை ஒரு பகுத்தறிவுள்ள ஆன்மா மற்றும் ஒரு இயந்திரத்தனமான உடல் எனப் பிரித்தது. இது பிற்கால அறிவியல் சிந்தனையில், குறிப்பாக உடலை ஒரு இயந்திரமாகப் பார்த்து ஆய்வு செய்யும் போக்கிற்கு ஊக்கமளித்தது.28 அதே நேரத்தில், மனதை தத்துவத்தின் தனித்துவமான ஆய்வுப் பொருளாகவும், அறிவியலின் எல்லைக்கு அப்பாற்பட்டதாகவும் நிலைநிறுத்தியது.

 

1.6 கணித நிச்சயத்தன்மையை அறிவின் மாதிரியாகக் கருதுதல் (Mathematical Certainty as Model for Knowledge)

டெக்கார்ட் ஒரு சிறந்த கணிதவியலாளராகவும் இருந்தார், மேலும் கணிதத்தின் தெளிவு, நிச்சயம் மற்றும் தர்க்கரீதியான கடுமை ஆகியவற்றால் அவர் பெரிதும் ஈர்க்கப்பட்டார்.1 கணிதத்தில், சில சுய-வெளிப்படையான அடிப்படைக் கொள்கைகளிலிருந்து (axioms) தொடங்கி, தர்க்கரீதியான déduction மூலம் சிக்கலான ஆனால் மறுக்க முடியாத உண்மைகளை அடைய முடியும் என்பதை அவர் கண்டார்.

இந்த கணித முறையின் வெற்றியால் ஈர்க்கப்பட்ட டெக்கார்ட், தத்துவம் மற்றும் பிற அறிவுத் துறைகளிலும் இதேபோன்ற நிச்சயமான அடித்தளத்தையும், தர்க்கரீதியான கட்டமைப்பையும் நிறுவ முடியும் என்று நம்பினார்.28 அவரது புகழ்பெற்ற "முறை" (Method), நான்கு விதிகளை உள்ளடக்கியது: (1) தெளிவாகவும் தனித்துவமாகவும் அறியப்படாத எதையும் உண்மையாக ஏற்காதிருத்தல், (2) சிக்கல்களை மிகச் சிறிய, எளிமையான பகுதிகளாகப் பிரித்தல், (3) எளிமையானவற்றிலிருந்து தொடங்கி படிப்படியாக சிக்கலானவற்றுக்குச் செல்லுதல், (4) முழுமையான மறுஆய்வு மற்றும் கணக்கெடுப்பு மூலம் எதையும் விட்டுவிடாமல் இருப்பதை உறுதி செய்தல். இந்த விதிகள் கணிதச் சிந்தனை முறையின் நேரடிப் பிரயோகமாகும்.3

டெக்கார்ட், அனைத்து மனித அறிவையும் சில அடிப்படை, தெளிவான மற்றும் தனித்துவமான கருத்துக்களிலிருந்து (கணித аксиоம்கள் போல) தர்க்கரீதியாகப் பெற முடியும் என்று நம்பினார்.4 அவரது பகுப்பாய்வு வடிவியல் (analytic geometry), இயற்கணிதத்தை வடிவியலுடன் இணைத்து, வடிவியல் சிக்கல்களை இயற்கணித சமன்பாடுகள் மூலம் தீர்க்கும் முறையை உருவாக்கியது, இந்த அணுகுமுறைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.1 இது சிக்கலான வடிவியல் உறவுகளைத் துல்லியமாகவும் தெளிவாகவும் வெளிப்படுத்த உதவியது.

கணிதத்தை அறிவின் முன்மாதிரியாகக் கருதியதன் மூலம், டெக்கார்ட் பிரபஞ்சத்தின் அடிப்படை இயல்பு தர்க்கரீதியானது மற்றும் பகுத்தறிவுக்கு எட்டக்கூடியது என்ற ஆழமான நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.28 ஒழுங்கற்றதாகவும் சிக்கலானதாகவும் தோன்றும் உலகின் மேற்பரப்பிற்கு அடியில், ஒரு மறைந்திருக்கும் கணித அல்லது தர்க்கரீதியான ஒழுங்கு உள்ளது என்றும், அதை மனித பகுத்தறிவால் கண்டறிய முடியும் என்றும் அவர் நம்பினார். இந்த நம்பிக்கை, அறிவொளிக் காலத்தின் அறிவியல் மற்றும் தத்துவ வளர்ச்சிக்கு ஒரு சக்திவாய்ந்த உந்துதலாக அமைந்தது.

பகுதி 2: மேற்கத்திய வரலாற்றுச் சிந்தனையில் கார்ட்டீசிய தர்க்கவாதத்தின் தாக்கம்

ரெனே டெக்கார்ட்டின் தத்துவப் புரட்சி, குறிப்பாக அவரது பகுத்தறிவுவாதம், 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் மேற்கத்திய சிந்தனையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தத் தாக்கம், 18 ஆம் நூற்றாண்டில் உச்சம் பெற்ற அறிவொளிக் காலச் சிந்தனைகளுடன் (Enlightenment thinking) பின்னிப் பிணைந்து, வரலாற்று ஆய்வு மற்றும் வரலாற்று வரைவியல் (historiography) ஆகியவற்றின் அணுகுமுறைகளை கணிசமாக மாற்றியமைத்தது.

2.1 அறிவொளிக் காலச் சிந்தனைகளுடனான தொடர்பு (Connection with Enlightenment Thinking)

 

டெக்கார்ட்டின் பகுத்தறிவு மீதான வலியுறுத்தல், அறிவொளிக் காலத்தின் மையக் கருப்பொருளாக மாறியது.6 அறிவொளி சிந்தனையாளர்கள், டெக்கார்ட்டைப் போலவே, மனித பகுத்தறிவின் சக்தியை நம்பினர் மற்றும் அதை அறிவின் முதன்மை ஆதாரமாகவும், சமூக மற்றும் அரசியல் சீர்திருத்தத்திற்கான கருவியாகவும் கண்டனர்.6 பாரம்பரிய அதிகார வடிவங்களான மதம் மற்றும் முடியாட்சி, பெரும்பாலும் பகுத்தறிவற்ற நம்பிக்கைகள் மற்றும் மூடநம்பிக்கைகளின் அடிப்படையில் அமைந்திருப்பதாக அவர்கள் விமர்சித்தனர்.35

டெக்கார்ட்டின் முறைப்படுத்தப்பட்ட சந்தேகம், இந்த பாரம்பரிய அதிகாரங்களையும், நீண்டகாலமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நம்பிக்கைகளையும் விமர்சன ரீதியாக கேள்விக்குட்படுத்துவதற்கான ஒரு சக்திவாய்ந்த அறிவுசார் மாதிரியை வழங்கியது.6 எதையும் அதன் தர்க்கரீதியான மற்றும் அனுபவ ரீதியான அடித்தளங்களை ஆராயாமல் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்ற டெக்கார்ட்டின் அணுகுமுறை, அறிவொளி சிந்தனையாளர்களின் விமர்சன மனப்பான்மைக்கு உத்வேகம் அளித்தது. அவர்கள் டெக்கார்ட்டின் பகுத்தறிவு மற்றும் சந்தேகம் சார்ந்த அணுகுமுறையை ஏற்றுக்கொண்டு, அதை வரலாறு, அரசியல், சமூகம், மதம் போன்ற அனைத்து மனித அறிவுத் துறைகளுக்கும் விரிவுபடுத்தினர்.6 இதன் விளைவாக, அறிவொளிக் காலம் என்பது பகுத்தறிவின் யுகமாக (Age of Reason) அறியப்பட்டது. கார்ட்டீசிய தர்க்கவாதம், அறிவொளிக் காலத்திற்கு ஒரு குறிப்பிட்ட முறைமையை (methodology) வழங்கியது; இது வெறும் தத்துவ உள்ளடக்கத்தைப் பற்றியது மட்டுமல்ல, உண்மையை எவ்வாறு அடைவது, எதை நம்புவது, மற்றும் அறிவை எவ்வாறு கட்டமைப்பது என்பதைத் தீர்மானிக்கும் ஒரு செயல்முறையைப் பற்றியதாகும்.

 

2.2 முன்னேற்றம் மற்றும் உலகளாவிய பகுத்தறிவு மீதான நம்பிக்கை (Belief in Progress and Universal Reason)

 

கார்ட்டீசிய மற்றும் அறிவொளி சிந்தனையின் ஒரு முக்கிய அம்சம், மனித வரலாறு என்பது ஒரு நேர்கோட்டு முன்னேற்றப் பாதை (linear progression) என்ற நம்பிக்கை ஆகும்.32 அறியாமை, மூடநம்பிக்கை, மதவெறி மற்றும் கொடுங்கோன்மை ஆகியவற்றின் இருண்ட காலங்களிலிருந்து, பகுத்தறிவு, அறிவியல், சகிப்புத்தன்மை மற்றும் சுதந்திரம் ஆகியவற்றின் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி மனிதகுலம் தவிர்க்க முடியாமல் முன்னேறிச் செல்வதாக அவர்கள் நம்பினர்.

இந்த முன்னேற்றத்தின் உந்து சக்தியாக உலகளாவிய பகுத்தறிவு (universal reason) கருதப்பட்டது.36 பகுத்தறிவு என்பது இனம், மதம், கலாச்சாரம் ஆகியவற்றைக் கடந்து அனைத்து மனிதர்களிடமும் உள்ளார்ந்த ஒரு திறனாகும். சரியான கல்வி, பகுத்தறிவற்ற தடைகளை (பாரம்பரியம், மதக் கட்டுப்பாடுகள்) நீக்குதல் ஆகியவற்றின் மூலம், மனிதகுலத்தின் பகுத்தறிவுத் திறன் மேம்படும் என்றும், அதன் விளைவாக சமூகம் தொடர்ந்து முன்னேறும் என்றும் அவர்கள் நம்பினர். வரலாற்றின் முக்கிய நோக்கம், இந்த முன்னேற்றத்தின் கதையைச் சொல்வதும், கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு எதிர்கால முன்னேற்றத்திற்கு வழிகாட்டுவதும் ஆகும்.32

இருப்பினும், இந்த முன்னேற்றக் கருத்து பெரும்பாலும் ஐரோப்பிய மையவாதப் பார்வையுடன் (Eurocentrism) பிணைந்திருந்தது.40 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் ஏற்பட்ட அறிவியல் மற்றும் தத்துவ வளர்ச்சிகள் பகுத்தறிவின் உச்சகட்ட வெளிப்பாடாகக் கருதப்பட்டன.32 இதன் விளைவாக, ஐரோப்பிய நாகரிகமும் அதன் நிறுவனங்களும் முன்னேற்றத்தின் அளவுகோலாக அமைந்தன. ஐரோப்பியரல்லாத சமூகங்களும் கலாச்சாரங்களும் இந்த அளவுகோலின்படி மதிப்பிடப்பட்டு, பெரும்பாலும் "பழமையானவை", "காட்டுமிராண்டித்தனமானவை" அல்லது "பின்தங்கியவை" என்று முத்திரை குத்தப்பட்டன. இந்த உலகளாவிய பகுத்தறிவு மற்றும் முன்னேற்றப் பாதை என்ற கருத்து, பின்னர் காலனித்துவ சித்தாந்தங்களுக்கு நியாயம் கற்பிக்கவும் பயன்படுத்தப்பட்டது.

 

2.3 புறநிலை வரலாற்று உண்மையை நோக்கிய தேடல் (Search for Objective Historical Truth)

 

டெக்கார்ட் தனது தத்துவத்தில் சந்தேகத்திற்கு இடமில்லாத நிச்சயமான அறிவைத் தேடியது போலவே, அறிவொளிக் கால வரலாற்றாசிரியர்களும் கடந்த காலத்தைப் பற்றிய புறநிலை உண்மைகளைக் (objective historical truth) கண்டறிய முடியும் என்று உறுதியாக நம்பினர்.5 வரலாறு என்பது வெறும் கட்டுக்கதைகள், புராணங்கள் அல்லது தனிப்பட்ட சார்புநிலைகளைக் கொண்ட கதைகள் அல்ல, மாறாக அது உண்மையான நிகழ்வுகளின் துல்லியமான பதிவு என்று அவர்கள் கருதினர்.

பகுத்தறிவு மற்றும் வளர்ந்து வந்த அறிவியல் முறைகளைப் பயன்படுத்துவதன் மூலம், வரலாற்றாசிரியர்கள் தங்களது சொந்த விருப்பு வெறுப்புகள், தப்பெண்ணங்கள் மற்றும் சமகால அழுத்தங்களிலிருந்து விடுபட்டு, கடந்த காலத்தை அது நிகழ்ந்தவாறே (as it actually happened) பாரபட்சமின்றி அறிய முடியும் என்று அவர்கள் நம்பினர்.33 வரலாற்று ஆதாரங்களை (ஆவணங்கள், தொல்பொருட்கள் போன்றவை) கவனமாகச் சேகரித்து, அவற்றை விமர்சன ரீதியாகப் பகுப்பாய்வு செய்வதன் மூலம், கடந்த கால நிகழ்வுகளின் உண்மையான வரிசையையும் காரணங்களையும் கண்டறிய முடியும் என்று கருதப்பட்டது.

புறநிலை உண்மைக்கான இந்தத் தேடல், வரலாற்று ஆய்வை மதவியல் விளக்கங்களிலிருந்தும் (theological interpretations), இலக்கியக் கற்பனைகளிலிருந்தும் விடுவிக்கும் ஒரு முயற்சியாக அமைந்தது.6 வரலாற்றை ஒரு தன்னாட்சி பெற்ற (autonomous), பகுத்தறிவு சார்ந்த அறிவுத் துறையாக நிறுவுவதே இதன் நோக்கமாகும். புறநிலை உண்மைகளைக் கண்டறிந்து, அவற்றை தர்க்கரீதியாக முன்வைப்பதன் மூலம், வரலாறு என்பது அகநிலை கருத்துக்களுக்கு அப்பாற்பட்ட, நம்பகமான அறிவை வழங்க முடியும் என்று அறிவொளி வரலாற்றாசிரியர்கள் நம்பினர்.

 

2.4 வரலாற்றை ஒரு அறிவியலாக மாற்றும் சாத்தியம் குறித்த பார்வை (View of History as a Potential Science)

 

கார்ட்டீசிய தர்க்கவாதம் மற்றும் அறிவொளிக் காலத்தின் அறிவியல் புரட்சியின் தாக்கம், வரலாற்றையும் ஒரு அறிவியலாக (science) மாற்ற முடியும் என்ற நம்பிக்கையை வலுப்படுத்தியது.32 ஐசக் நியூட்டன் போன்ற விஞ்ஞானிகள் இயற்கை உலகின் இயக்கத்தை விளக்கக்கூடிய உலகளாவிய விதிகளைக் கண்டறிந்தது போல 33, மனித சமூகங்களின் வளர்ச்சிக்கும் வரலாற்று நிகழ்வுகளுக்கும் பின்னால் இதேபோன்ற விதிகள் அல்லது வடிவங்கள் (laws or patterns) இருக்கலாம் என்று நம்பப்பட்டது.32

பகுத்தறிவு மற்றும் அனுபவ ரீதியான அவதானிப்பு (empirical observation) ஆகியவற்றின் மூலம் இந்த வரலாற்று விதிகளைக் கண்டறிய முடியும் என்று கருதப்பட்டது.57 வரலாற்றுத் தரவுகளைச் சேகரித்து, அவற்றை முறைப்படுத்தி, பகுப்பாய்வு செய்வதன் மூலம், நிகழ்வுகளுக்கு இடையிலான காரணகாரியத் தொடர்புகளையும், சமூக மாற்றத்தின் அடிப்படை இயக்கவியலையும் வெளிக்கொணர முடியும் என்று நம்பப்பட்டது.

வரலாற்றை ஒரு அறிவியலாக மாற்றுவதன் மூலம், அதன் முடிவுகள் புறநிலையாகவும் (objective), சரிபார்க்கக்கூடியதாகவும் (verifiable), மற்றும் ஒருவேளை கணிக்கக்கூடியதாகவும் (predictable) இருக்கும் என்று கருதப்பட்டது.33 இது, வரலாறு என்பது வெறும் கடந்த கால நிகழ்வுகளின் தொகுப்பு அல்ல, மாறாக அது மனித நடத்தை மற்றும் சமூக இயக்கவியல் பற்றிய ஆழமான புரிதலை வழங்கும் ஒரு அறிவுத் துறை என்ற கருத்தை வலுப்படுத்தியது. இந்த அறிவியல் பூர்வமான அணுகுமுறை, மனித நடத்தையையும் சமூக நிகழ்வுகளையும் இயற்கை நிகழ்வுகளைப் போலவே, சில அடிப்படை, பகுத்தறிவுள்ள விதிகளுக்கு உட்பட்டதாகக் கருதும் ஒரு இயந்திரவாதப் பார்வையை (mechanistic view) பிரதிபலித்தது. மனிதர்கள் மற்றும் சமூகங்கள் சிக்கலான அமைப்புகளாக இருந்தாலும், அவற்றின் செயல்பாடுகளையும் பகுத்தறிவின் மூலம் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கை நிலவியது.

2.5 பகுத்தறிவு சார்ந்த காரணகாரியத் தொடர்புகளின் அடிப்படையில் வரலாற்றை விளக்குதல் (Explaining History through Rational Cause-and-Effect)

கார்ட்டீசிய மற்றும் அறிவொளி சிந்தனையின் ஒரு முக்கிய விளைவு, வரலாற்று நிகழ்வுகளை விளக்கும் முறையில் ஏற்பட்ட மாற்றமாகும். தெய்வீகத் தலையீடு (divine intervention), விதி (fate), அல்லது இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகள் போன்ற விளக்கங்களுக்குப் பதிலாக, பகுத்தறிவு சார்ந்த, இவ்வுலகக் காரணகாரியத் தொடர்புகளை (rational cause-and-effect) அடையாளம் காண்பதில் கவனம் செலுத்தப்பட்டது.32

வரலாற்று மாற்றங்களுக்குப் பின்னால் உள்ள முக்கிய உந்து சக்திகளாக மனிதர்களின் நோக்கங்கள் (intentions), முடிவுகள் (decisions), உணர்ச்சிகள் (passions), அரசியல் மற்றும் பொருளாதார நலன்கள் (interests), சமூக மற்றும் புவியியல் காரணிகள் (factors) போன்றவை கருதப்பட்டன.64 வரலாற்றாசிரியரின் பணி, இந்த சிக்கலான காரணிகளின் வலையமைப்பைப் பிரித்தறிந்து, நிகழ்வுகள் ஏன் அவ்வாறு நடந்தன என்பதை தர்க்கரீதியாக விளக்குவதாகும். உதாரணமாக, எட்வர்ட் கிப்பன் தனது "ரோமானியப் பேரரசின் வீழ்ச்சியும் அழிவும்" என்ற நூலில், பேரரசின் வீழ்ச்சிக்கு இராணுவ, அரசியல், பொருளாதார மற்றும் தார்மீகக் காரணங்களை விரிவாக ஆராய்ந்தார், அதை தெய்வீகத் தண்டனை அல்லது விதியின் விளைவாகக் கருதவில்லை.32

இந்த அணுகுமுறை இரண்டு முக்கிய விளைவுகளை ஏற்படுத்தியது. முதலாவதாக, இது வரலாற்றை மதச்சார்பற்றதாக்கியது (secularized history).6 வரலாறு என்பது கடவுளின் திட்டத்தின் வெளிப்பாடு என்ற பார்வையிலிருந்து மாறி, மனிதர்கள் மற்றும் இயற்கை சக்திகளின் செயல்பாட்டுத் தளமாக மாறியது. இரண்டாவதாக, இது மனித முகமையை (human agency) வரலாற்று மாற்றத்தின் மையமாக நிறுவியது. மனிதர்களின் செயல்களும் முடிவுகளுமே வரலாற்றின் போக்கைத் தீர்மானிக்கின்றன என்ற கருத்து வலுப்பெற்றது. இது, மனிதர்கள் தங்கள் சொந்த விதியை வடிவமைக்க முடியும் என்ற அறிவொளிக் கால நம்பிக்கையுடன் ஒத்துப்போனது.

பகுதி 3: கார்ட்டீசிய தர்க்கவாத வரலாற்று எழுத்துமுறையின் பண்புகள்

கார்ட்டீசிய தர்க்கவாதம் மற்றும் அறிவொளிக் காலச் சிந்தனைகளின் தாக்கம், வரலாற்று ஆய்வின் நடைமுறையிலும், வரலாற்று நூல்களை எழுதும் முறையிலும் குறிப்பிட்ட பண்புகளை உருவாக்கியது. இந்தப் பண்புகள், முந்தைய கால வரலாற்று எழுத்துமுறைகளிலிருந்து கணிசமாக வேறுபட்டன.

3.1 சரிபார்க்கக்கூடிய உண்மைகள் மற்றும் தர்க்கரீதியான ஒத்திசைவுக்கு முக்கியத்துவம் அளித்தல் (Emphasis on Verifiable Facts and Logical Coherence)

 

கார்ட்டீசிய/அறிவொளி வரலாற்று வரைவியல், வரலாற்றுப் பதிவுகள் உறுதியான ஆதாரங்களின் அடிப்படையில் அமைய வேண்டும் என்று வலியுறுத்தியது.7 வெறும் வதந்திகள், செவிவழிச் செய்திகள், அல்லது உறுதிப்படுத்தப்படாத கூற்றுகளுக்குப் பதிலாக, ஆவணங்கள், கடிதங்கள், தொல்பொருள் சான்றுகள் போன்ற சரிபார்க்கக்கூடிய உண்மைகளுக்கு (verifiable facts) முன்னுரிமை அளிக்கப்பட்டது. வரலாற்றாசிரியர்கள் ஆதாரங்களை விமர்சன ரீதியாக மதிப்பீடு செய்து, அவற்றின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

மேலும், வரலாற்று விவரிப்பு என்பது வெறும் உண்மைகளின் தொகுப்பாக மட்டும் இல்லாமல், தர்க்கரீதியாக ஒத்திசைவான (logically coherent) ஒரு கட்டமைப்பைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் கருதப்பட்டது.7 நிகழ்வுகளுக்கு இடையிலான காரணகாரியத் தொடர்புகள் தெளிவாக விளக்கப்பட வேண்டும், மேலும் வாதங்கள் பகுத்தறிவுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். கட்டுக்கதைகள், புராணங்கள், மற்றும் பகுத்தறிவுக்குப் புறம்பான விளக்கங்கள் தவிர்க்கப்பட்டன அல்லது அவை விமர்சனப் பார்வைக்கு உட்படுத்தப்பட்டன.45

இந்த அணுகுமுறை, டெக்கார்ட்டின் தெளிவான மற்றும் தனித்துவமான கருத்துக்கள் மீதான வலியுறுத்தலையும், கணிதத்தின் தர்க்கரீதியான கட்டமைப்பை ஒரு மாதிரியாகக் கருதியதையும் பிரதிபலிக்கிறது.38 உண்மைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு தர்க்கரீதியான கட்டமைப்பு, வரலாற்றை அகநிலை விளக்கங்கள், கற்பனைகள் அல்லது சார்புநிலைகளிலிருந்து விடுவித்து, அதற்கு ஒரு புறநிலைத் தன்மையையும் அறிவார்ந்த நம்பகத்தன்மையையும் வழங்கும் என்று நம்பப்பட்டது. இது வரலாற்றை இலக்கியம் அல்லது புராணங்களிலிருந்து வேறுபடுத்தி, அதை ஒரு தனித்துவமான, பகுத்தறிவு சார்ந்த அறிவுத் துறையாக நிலைநிறுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாகும்.

3.2 நிகழ்வுகளுக்கு பகுத்தறிவு சார்ந்த விளக்கங்களை வழங்குதல் (Providing Rational Explanations)

கார்ட்டீசிய தர்க்கவாதத்தின் தாக்கத்தால், வரலாற்று நிகழ்வுகளுக்கான விளக்கங்களில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டது. இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகள், தெய்வீகத் தலையீடு, அற்புதங்கள் அல்லது விதி போன்ற காரணங்களைக் குறைத்து மதிப்பிட்டு, அதற்குப் பதிலாக பகுத்தறிவு சார்ந்த, இவ்வுலகக் காரணங்களை (rational, worldly explanations) வழங்குவதில் கவனம் செலுத்தப்பட்டது.6

வரலாற்று நிகழ்வுகள், மனிதர்களின் செயல்கள், அரசியல் நகர்வுகள், சமூக மற்றும் பொருளாதார நிலைமைகள், புவியியல் காரணிகள் போன்ற கவனிக்கக்கூடிய மற்றும் பகுப்பாய்வு செய்யக்கூடிய காரணிகளின் விளைவுகளாகப் பார்க்கப்பட்டன. மத நம்பிக்கைகள் மற்றும் மத நிறுவனங்களின் பங்கு கூட, தெய்வீக வெளிப்பாடுகளாகக் கருதப்படாமல், சமூக, அரசியல் அல்லது உளவியல் காரணிகளின் அடிப்படையில் பகுத்தறிவுடன் விளக்கப்பட முயலப்பட்டது.6 உதாரணமாக, வோல்டேர் போன்ற அறிவொளி சிந்தனையாளர்கள், மத நிறுவனங்களின் அதிகாரத்தையும், மதவெறியையும் கடுமையாக விமர்சித்தனர், அவற்றை பகுத்தறிவின் எதிரிகளாகக் கண்டனர்.32

இது வரலாற்றின் மதச்சார்பற்றமயமாக்கலின் (secularization) ஒரு முக்கிய படியாகும். வரலாறு என்பது மனிதர்களின் மற்றும் இயற்கை சக்திகளின் செயல்பாடுகளால் இயக்கப்படும் ஒரு செயல்முறையாகப் பார்க்கப்பட்டது, கடவுளின் மறைபொருளான திட்டத்தின் வெளிப்பாடாக அல்ல. இந்த மாற்றம், மனித முகமைக்கு (human agency) வரலாற்றில் ஒரு மைய இடத்தைக் கொடுத்ததுடன், வரலாற்று ஆய்வை பகுத்தறிவு மற்றும் அனுபவ ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் ஒரு துறையாக வலுப்படுத்தியது.

 

3.3 வரலாற்றில் உலகளாவிய விதிகள் அல்லது வடிவங்களைத் தேடுதல் (Search for Universal Laws or Patterns)

 

இயற்கை அறிவியல்களில், குறிப்பாக நியூட்டனின் இயற்பியலில், பிரபஞ்சத்தை நிர்வகிக்கும் உலகளாவிய விதிகள் (universal laws) கண்டறியப்பட்டது போல, மனித வரலாற்றிலும் அத்தகைய விதிகள் அல்லது மீண்டும் மீண்டும் நிகழும் வடிவங்கள் (patterns) இருக்கக்கூடும் என்று கார்ட்டீசிய/அறிவொளி சிந்தனையாளர்கள் நம்பினர்.32

வரலாற்று நிகழ்வுகள் தற்செயலானவை அல்லது குழப்பமானவை அல்ல, மாறாக அவை சில அடிப்படை, பகுத்தறியக்கூடிய கொள்கைகளால் இயக்கப்படுகின்றன என்று கருதப்பட்டது. மாண்டேஸ்கியூ தனது "சட்டங்களின் சாரம்" (The Spirit of the Laws) என்ற நூலில், வெவ்வேறு சமூகங்களின் சட்டங்கள் மற்றும் அரசாங்க வடிவங்கள் அவற்றின் காலநிலை, புவியியல், மற்றும் மக்களின் பழக்கவழக்கங்கள் போன்ற காரணிகளுடன் எவ்வாறு தொடர்புபட்டுள்ளன என்பதை ஆராய்ந்து, சில பொதுவான வடிவங்களைக் கண்டறிய முயன்றார்.32 ஆடம் ஸ்மித் போன்ற பொருளாதார சிந்தனையாளர்கள், பொருளாதார நடத்தையை நிர்வகிக்கும் உலகளாவிய விதிகளை அடையாளம் காண முயன்றனர்.48

இந்த உலகளாவிய விதிகளைக் கண்டறிவதன் மூலம், வரலாற்றின் போக்கைப் புரிந்துகொள்வது மட்டுமல்லாமல், எதிர்கால சமூக நிகழ்வுகளை ஒருவேளை கணிக்கவோ அல்லது சமூகங்களைச் சிறந்த முறையில் வடிவமைக்கவோ முடியும் என்று நம்பப்பட்டது.32 இந்தத் தேடல், மனித இயல்பு மற்றும் சமூக நடத்தை ஆகியவை காலம் மற்றும் இடத்தைக் கடந்து சில நிலையான, உலகளாவிய பண்புகளைக் கொண்டுள்ளன என்ற அனுமானத்தின் அடிப்படையில் அமைந்தது. இருப்பினும், இந்த அணுகுமுறை, குறிப்பிட்ட வரலாற்றுச் சூழல்கள் மற்றும் கலாச்சார வேறுபாடுகளின் தனித்துவமான முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிடவும், ஐரோப்பிய அனுபவங்களை உலகளாவியதாகத் தவறாகக் கருதும் போக்கிற்கும் வழிவகுத்தது.32

 

3.4 வரலாற்றை ஒரு நேர்கோட்டு முன்னேற்றமாகக் காணும் போக்கு (Tendency to View History as Linear Progression)

 

கார்ட்டீசிய தர்க்கவாதம் மற்றும் அறிவொளிக் காலச் சிந்தனையின் ஒரு மிக முக்கியமான மற்றும் பரவலான அம்சம், வரலாற்றை ஒரு நேர்கோட்டு முன்னேற்றமாகப் (linear progression) பார்க்கும் போக்கு ஆகும்.32 இதன்படி, மனித வரலாறு என்பது ஒரு தொடர்ச்சியான, மேல்நோக்கிய இயக்கமாகும். அது அறியாமை, காட்டுமிராண்டித்தனம், மூடநம்பிக்கை மற்றும் ஒடுக்குமுறை ஆகியவற்றின் நிலைகளிலிருந்து படிப்படியாக பகுத்தறிவு, அறிவியல், அறிவு, சகிப்புத்தன்மை, சுதந்திரம் மற்றும் நாகரிகத்தை நோக்கி நகர்கிறது.

ஒவ்வொரு புதிய காலகட்டமும் முந்தைய காலகட்டத்தை விட இயல்பாகவே மேம்பட்டதாகவும், மனிதகுலம் தொடர்ந்து அறிவிலும் ஒழுக்கத்திலும் முன்னேறி வருவதாகவும் நம்பப்பட்டது.42 இந்த முன்னேற்றத்தின் இறுதி இலக்கு அல்லது உச்சகட்டம் என்பது பெரும்பாலும் அறிவொளிக் காலத்தின் இலட்சியங்களான பகுத்தறிவு ஆட்சி, அறிவியல் மேலாதிக்கம், தனிமனித சுதந்திரம் மற்றும் மதச்சார்பற்ற சமூகம் என்பதாகவே கருதப்பட்டது.50 ஸ்காட்டிஷ் அறிவொளி சிந்தனையாளர்கள் சமூகங்கள் வேட்டையாடுதல், மேய்த்தல், விவசாயம், வர்த்தகம் என குறிப்பிட்ட படிநிலைகளில் முன்னேறுவதாகக் கருதினர்.48

இந்த நேர்கோட்டுப் பார்வை, வரலாற்றின் சிக்கலான தன்மையை எளிமைப்படுத்தியது. வரலாற்றில் ஏற்படும் சரிவுகள், பின்னடைவுகள், தேக்கநிலைகள் அல்லது மாற்றுப் பாதைகள் (alternative trajectories) பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டன அல்லது அவை தற்காலிக தடைகளாக மட்டுமே பார்க்கப்பட்டன. இது, வரலாறு என்பது ஒரு குறிப்பிட்ட (பெரும்பாலும் ஐரோப்பிய) இலக்கை நோக்கிய தவிர்க்க முடியாத, ஒற்றைப் பாதை இயக்கம் என்ற ஒரு தொலைநோக்கு (teleological) பார்வையை உருவாக்கியது.72 இந்தப் பார்வை, மற்ற கலாச்சாரங்களையும் வரலாற்று அனுபவங்களையும் இந்தப் பாதையில் பின்தங்கிய நிலைகளாக மதிப்பிட வழிவகுத்தது.

பகுதி 4: பிற வரலாற்று அணுகுமுறைகளுடன் ஒப்பீடு

 

கார்ட்டீசிய தர்க்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அறிவொளிக் கால வரலாற்றுப் பார்வை, அதன் காலத்திற்குப் புரட்சிகரமாக இருந்தபோதிலும், அது மட்டுமே வரலாற்றை அணுகுவதற்கான ஒரே வழி அல்ல. அதன் அனுமானங்களும் முறைகளும் பிற வரலாற்று அணுகுமுறைகளிலிருந்து கணிசமாக வேறுபடுகின்றன.

4.1 முன்-நவீன காலக் குறிப்புகள்/ஆண்டுவரிசைக்குறிப்புகள் (Pre-Modern Chronicles/Annals)

 

அறிவொளிக் காலத்திற்கு முந்தைய வரலாற்று எழுத்துமுறை, குறிப்பாக இடைக்கால ஐரோப்பாவில், பெரும்பாலும் ஆண்டுவரிசைக்குறிப்புகள் (annals) மற்றும் குறிப்புகள் (chronicles) வடிவத்தில் அமைந்திருந்தது. இவை கார்ட்டீசிய/அறிவொளி அணுகுமுறையிலிருந்து பல வழிகளில் வேறுபட்டன:

  • நோக்கம் மற்றும் கவனம்: குறிப்புகள் மற்றும் ஆண்டுவரிசைக்குறிப்புகளின் முதன்மை நோக்கம், நிகழ்வுகளை, குறிப்பாக முக்கியமானதாகக் கருதப்பட்ட நிகழ்வுகளை (போர்கள், அரசர்களின் பிறப்பு/இறப்பு, இயற்கை பேரழிவுகள், மத நிகழ்வுகள்) காலவரிசைப்படி பதிவு செய்வதாகும்.68 அவை பெரும்பாலும் விளக்கத்தை விட விவரிப்புக்கு (description over explanation) முக்கியத்துவம் கொடுத்தன.7 இதற்கு மாறாக, அறிவொளி வரலாறு நிகழ்வுகளுக்குப் பின்னால் உள்ள காரணங்களைக் கண்டறிந்து, அவற்றை பகுத்தறிவுடன் விளக்குவதை நோக்கமாகக் கொண்டது.32
  • காரணகாரியம்: முன்-நவீன காலப் பதிவுகள், நிகழ்வுகளுக்கான காரணங்களை விளக்கும்போது, பெரும்பாலும் தெய்வீகத் தலையீடு, கடவுளின் சித்தம், விதி அல்லது இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளைக் குறிப்பிட்டன.56 மனித செயல்கள் கூட ஒரு பெரிய தெய்வீகத் திட்டத்தின் பகுதியாகப் பார்க்கப்பட்டன. அறிவொளி வரலாறு, இதற்கு மாறாக, இவ்வுலக, பகுத்தறிவு சார்ந்த காரணகாரியத் தொடர்புகளை (மனித நோக்கங்கள், சமூக நிலைமைகள்) வலியுறுத்தியது மற்றும் தெய்வீக விளக்கங்களைத் தவிர்த்தது.6
  • புறநிலைத்தன்மை: முன்-நவீன கால எழுத்தாளர்கள் புறநிலை உண்மையை இன்றைய அர்த்தத்தில் தேடவில்லை. அவர்களின் நோக்கம் பெரும்பாலும் தார்மீகப் பாடங்களைக் கற்பிப்பது, மத நம்பிக்கைகளை வலுப்படுத்துவது அல்லது ஒரு குறிப்பிட்ட ஆட்சியாளர் அல்லது நிறுவனத்தின் புகழைப் பரப்புவதாக இருந்தது.56 அறிவொளி வரலாற்றாசிரியர்கள், பகுத்தறிவு மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் புறநிலை உண்மையை அடைய முடியும் என்று நம்பினர்.32
  • கட்டமைப்பு: குறிப்புகள் பெரும்பாலும் நிகழ்வுகளின் பட்டியலாக, தளர்வான காலவரிசைப்படி அமைந்திருந்தன. அறிவொளி வரலாறு, ஒரு தர்க்கரீதியான, ஒத்திசைவான விவரிப்பு கட்டமைப்பை (narrative structure) உருவாக்க முயன்றது, அதில் நிகழ்வுகள் காரணகாரியத் தொடர்புகளால் இணைக்கப்பட்டிருந்தன.32
  • உலகப் பார்வை: முன்-நவீன பார்வை பெரும்பாலும் மதச்சார்புடையதாகவும், உள்ளூர் சார்ந்ததாகவும் இருந்தது. அறிவொளி வரலாறு மதச்சார்பற்றதாகவும், உலகளாவிய விதிகள் மற்றும் மனிதகுலத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றத்தில் அக்கறை கொண்டதாகவும் இருந்தது.32

சுருக்கமாக, முன்-நவீன காலக் குறிப்புகள் நிகழ்வுகளைப் பதிவுசெய்து, பெரும்பாலும் தெய்வீக ஒழுங்கின் பின்னணியில் அவற்றைப் பொருத்திப் பார்த்தன. அறிவொளி வரலாறு, பகுத்தறிவைப் பயன்படுத்தி அந்த நிகழ்வுகளை விளக்கவும், மனித மையப்படுத்தப்பட்ட, மதச்சார்பற்ற காரணகாரியத்தின் அடிப்படையில் அவற்றை ஒழுங்கமைக்கவும் முயன்றது.

4.2 ரொமாண்டிக்/ஹெகலியப் பார்வைகள் (Romantic/Hegelian Views)

 

18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 19 ஆம் நூற்றாண்டிலும், அறிவொளிக் காலத்தின் பகுத்தறிவுவாதத்திற்கு எதிர்வினையாக ரொமாண்டிசிசம் (Romanticism) மற்றும் ஹெகலியம் (Hegelianism) போன்ற புதிய வரலாற்றுப் பார்வைகள் தோன்றின.

  • ரொமாண்டிசிசம்: ரொமாண்டிக் வரலாற்றாசிரியர்கள், அறிவொளியின் பகுத்தறிவு, உலகளாவியவாதம் மற்றும் புறநிலை நோக்கங்களை விமர்சித்தனர்.32 அவர்கள் வலியுறுத்தியவை:
    • உணர்ச்சி மற்றும் உள்ளுணர்வு: பகுத்தறிவுக்குப் பதிலாக, மனித உணர்ச்சிகள், உள்ளுணர்வுகள் மற்றும் கற்பனையின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தினர்.78
    • தனித்துவம் மற்றும் தனிநபர்: உலகளாவிய விதிகளை விட, தனிநபர்களின் அனுபவங்கள், தனித்துவமான கலாச்சாரங்கள் மற்றும் தேசிய ஆன்மாவின் (national spirit) வெளிப்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளித்தனர்.79
    • கடந்த காலத்தின் மீதான அனுதாபம்: அறிவொளியைப் போலல்லாமல், ரொமாண்டிக்குகள் கடந்த காலத்தை, குறிப்பாக இடைக்காலத்தை, அதன் தனித்துவமான மதிப்புகளுக்காகப் பாராட்டினர் மற்றும் அனுதாபத்துடன் அணுகினர்.82
    • வரலாற்றின் கலைத்தன்மை: வரலாற்றை ஒரு அறிவியலாக மட்டும் பார்க்காமல், அதை ஒரு கலை வடிவமாகவும், கற்பனை மற்றும் விவரிப்புத் திறனுக்கான களமாகவும் கண்டனர்.79
  • ஹெகலியம்: ஜெர்மன் தத்துவஞானி G.W.F. ஹெகல் (Hegel), அறிவொளியின் பகுத்தறிவு மற்றும் முன்னேற்றக் கருத்துக்களை ஏற்றுக்கொண்டாலும், அவற்றை ஒரு புதிய, இயங்கியல் (dialectical) கட்டமைப்பிற்குள் மாற்றியமைத்தார்.86
    • இயங்கியல் செயல்முறை: வரலாறு என்பது ஒரு நேர்கோட்டுப் பாதை அல்ல, மாறாக அது முரண்பாடுகளின் (thesis, antithesis) மோதல் மற்றும் அவற்றின் தீர்வு (synthesis) மூலம் முன்னேறும் ஒரு இயங்கியல் செயல்முறை என்று ஹெகல் வாதிட்டார்.88 ஒவ்வொரு காலகட்டமும் அதன் முந்தைய காலகட்டத்தின் முரண்பாடுகளைத் தீர்த்து, ஒரு உயர் நிலையை அடைகிறது.
    • உலக ஆன்மா (World Spirit): வரலாறு என்பது உலக ஆன்மா (Geist) அல்லது பகுத்தறிவின் சுய-உணர்தல் (self-realization) மற்றும் சுதந்திரத்தை நோக்கிய படிப்படியான வளர்ச்சியின் கதை என்று அவர் கருதினார்.66
    • வரலாற்றுவாதம் (Historicism): ஒவ்வொரு காலகட்டத்திற்கும் அதன் தனித்துவமான தர்க்கம் மற்றும் மதிப்பு உண்டு என்றும், அதை அதன் சொந்தச் சூழலில் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் ஹெகல் வலியுறுத்தினார் (இது பின்னர் வரலாற்றுவாதம் என்று அறியப்பட்டது).86 இது அறிவொளியின் உலகளாவிய தரநிலைகளிலிருந்து வேறுபட்டது.

ரொமாண்டிசிசம் அறிவொளியின் பகுத்தறிவு மிகைப்படுத்தலை உணர்ச்சியால் எதிர்கொண்டது, அதே நேரத்தில் ஹெகலியம் அறிவொளியின் பகுத்தறிவுக் கருத்தை ஏற்றுக்கொண்டு, அதை மேலும் சிக்கலான, இயங்கியல் மற்றும் வரலாற்று ரீதியாக வளரும் ஒன்றாக மாற்றியமைத்தது. இரண்டும் அறிவொளி வரலாற்றுப் பார்வையின் சில குறைபாடுகளை நிவர்த்தி செய்ய முயன்றன.

4.3 பின்நவீனத்துவ விமர்சனங்கள் (Postmodern Critiques)

 

20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய பின்நவீனத்துவம் (Postmodernism), அறிவொளிக் காலத்தின் அடிப்படைக் கொள்கைகளையும், அதன் விளைவாக உருவான நவீன வரலாற்று வரைவியலையும் மிகத் தீவிரமாக விமர்சித்தது.91

  • பெரும் விவரிப்புகளின் நிராகரிப்பு: பின்நவீனத்துவம், அறிவொளியின் மையக் கருத்துக்களான புறநிலை உண்மை, உலகளாவிய பகுத்தறிவு, நேர்கோட்டு முன்னேற்றம் போன்றவற்றை 'பெரும் விவரிப்புகள்' (grand narratives or metanarratives) என்று கூறி நிராகரிக்கிறது.91 இந்தப் பெரும் விவரிப்புகள் யதார்த்தத்தை முழுமையாகப் பிரதிபலிப்பதில்லை என்றும், அவை பெரும்பாலும் அதிகாரத்தில் இருப்பவர்களின் நலன்களுக்குச் சேவை செய்கின்றன என்றும் வாதிடுகிறது.
  • அறிவின் சார்புநிலை: வரலாற்று அறிவு என்பது கடந்த காலத்தின் புறநிலை பிரதிபலிப்பு அல்ல, மாறாக அது மொழி, கலாச்சாரம், சமூகக் கட்டமைப்பு மற்றும் அதிகார உறவுகளால் வடிவமைக்கப்படும் ஒரு கட்டுமானம் (construction) என்று பின்நவீனத்துவம் கருதுகிறது.91 'உண்மை' என்பது நிலையானது அல்ல, அது விளக்கத்திற்கு உட்பட்டது மற்றும் பலதரப்பட்டது.
  • புறநிலைத்தன்மையின் சாத்தியமின்மை: வரலாற்றாசிரியர்கள் தங்களது சொந்தப் பின்னணி, மொழி மற்றும் தப்பெண்ணங்களிலிருந்து முழுமையாக விடுபட முடியாது. எனவே, முற்றிலும் புறநிலையான வரலாற்றுப் பார்வை என்பது சாத்தியமற்றது என்று பின்நவீனத்துவம் வாதிடுகிறது.91 ஒவ்வொரு வரலாற்று விவரிப்பும் ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டத்தையே

பிரதிபலிக்கிறது.

  • வரலாறும் அதிகாரமும்: வரலாற்று எழுத்து என்பது அதிகாரத்தின் ஒரு வடிவம் என்றும், அது பெரும்பாலும் ஆதிக்கக் குழுக்களின் கதைகளை முன்னிலைப்படுத்தி, விளிம்புநிலை மக்களின் (பெண்கள், சிறுபான்மையினர், காலனித்துவப்படுத்தப்பட்டவர்கள்) குரல்களை மறைக்கிறது அல்லது சிதைக்கிறது என்றும் விமர்சிக்கிறது.93

சுருக்கமாக, அறிவொளி வரலாறு புறநிலை உண்மை, பகுத்தறிவு மற்றும் முன்னேற்றத்தில் நம்பிக்கை வைத்தது. பின்நவீனத்துவம் இந்த நம்பிக்கைகளையே அடிப்படையாகக் கேள்விக்குள்ளாக்கி, அறிவின் சார்புநிலை, பன்மைத்துவம் மற்றும் அதிகாரத்தின் பங்கை வலியுறுத்துகிறது. இது அறிவொளி வரலாற்று வரைவியலின் உலகளாவிய மற்றும் புறநிலை உரிமைகோரல்களின் பின்னால் உள்ள அனுமானங்களையும், அதன் சாத்தியமான குறைபாடுகளையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.

ஒப்பீட்டு வரலாற்று வரைவியல் அணுகுமுறைகள்

அம்சம் (Feature)

கார்ட்டீசிய/அறிவொளி காலம் (Cartesian/Enlightenment)

முன்-நவீன காலக் குறிப்புகள் (Pre-Modern Chronicles)

ரொமாண்டிசிசம் (Romanticism)

ஹெகலியம் (Hegelianism)

பின்நவீனத்துவம் (Postmodernism)

புறநிலை உண்மை நோக்கம்

ஆம், பகுத்தறிவு மற்றும் சான்றுகள் மூலம் அடையக்கூடியது 32

இல்லை, பெரும்பாலும் தார்மீக/மத நோக்கம் 73

கேள்விக்குள்ளாக்கப்பட்டது, அகநிலை அனுபவம் முக்கியம் 79

ஆம், ஆனால் இயங்கியல் செயல்முறை மூலம் வெளிப்படும் 86

இல்லை, புறநிலை உண்மை என்பது ஒரு கட்டுமானம் 91

பகுத்தறிவின் பங்கு

முதன்மையானது, அறிவின் ஆதாரம் 1

வரையறுக்கப்பட்டது, மத நம்பிக்கை/விதி முக்கியம் 56

குறைக்கப்பட்டது, உணர்ச்சி/உள்ளுணர்வு முக்கியம் 78

முக்கியமானது, ஆனால் வரலாற்று ரீதியாக வளரும் இயங்கியல் பகுத்தறிவு 88

விமர்சிக்கப்பட்டது, அதிகாரக் கருவியாகப் பார்க்கப்படலாம் 93

முன்னேற்றப் பார்வை

நேர்கோட்டு, தவிர்க்க முடியாதது, பகுத்தறிவை நோக்கி 32

பெரும்பாலும் சுழற்சி அல்லது தெய்வீகத் திட்டத்தின் பகுதி 50

விமர்சிக்கப்பட்டது, கடந்த காலத்தின் தனித்துவ மதிப்பு 80

இயங்கியல் முன்னேற்றம், சுதந்திரத்தை நோக்கி 87

பெரும் விவரிப்பாக நிராகரிக்கப்பட்டது 91

முக்கிய கவனம்

உலகளாவிய விதிகள், மனிதகுலம், நாகரிகம், காரணகாரியம் 32

நிகழ்வுகள், ஆட்சியாளர்கள், தெய்வீக செயல்கள், உள்ளூர் நிகழ்வுகள் 73

தனிநபர்கள், தேசங்கள், கலாச்சாரங்கள், உணர்ச்சிகள், கலை 79

உலக ஆன்மா, அரசு, தத்துவம், இயங்கியல் மாற்றம் 86

மொழி, சொல்லாடல், அதிகாரம், விளிம்புநிலைக் குழுக்கள், பன்மைத்துவம் 91

தெய்வீகத் தலையீடு

நிராகரிக்கப்பட்டது அல்லது குறைக்கப்பட்டது 6

பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது 56

சில சமயங்களில் ஆன்மீக/இயற்கை சக்திகளாகப் பார்க்கப்பட்டது 82

உலக ஆன்மாவின் பகுதியாக மறைமுகமாக இருக்கலாம் 89

பொருத்தமற்றது அல்லது பகுத்தறிவற்ற நம்பிக்கையாகக் கருதப்பட்டது 92

முக்கிய நபர்கள்/எடுத்துக்காட்டுகள்

வோல்டேர், கிப்பன், ஹியூம், மாண்டேஸ்கியூ 32

யூசிபியஸ், பீட், கிரிகோரி ஆஃப் டூர்ஸ், இடைக்கால குறிப்பாளர்கள் 73

ஹெர்டர், மைக்கேலெட், கார்லைல் 80

ஹெகல் 86

ஃபூக்கோ, டெர்ரிடா, லியோடார்ட், ஹேடன் வைட் 91

 

பகுதி 5: தொகுப்புரை - கார்ட்டீசிய தர்க்கவாதப் பார்வையில் வரலாறு

 

கார்ட்டீசிய தர்க்கவாதம் மற்றும் அதன் வழிவந்த அறிவொளிக் காலச் சிந்தனைகளால் ஆழமாகப் பாதிக்கப்பட்ட வரலாற்றுப் பார்வை, ஒரு தனித்துவமான மற்றும் செல்வாக்குமிக்க அணுகுமுறையாகும். இந்த அணுகுமுறையின் மையத்தில் பகுத்தறிவின் மீதான அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. டெக்கார்ட்டின் முறைப்படுத்தப்பட்ட சந்தேகத்தின் மூலம் பெறப்பட்ட அகநிலையின் நிச்சயமான உண்மையிலிருந்து தொடங்கி, இந்தப் பார்வை புற உலகையும், மனித வரலாற்றையும் பகுத்தறிவின் மூலம் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும் என்று நம்புகிறது.

இந்தப் பார்வையில், வரலாறு என்பது வெறுமனே கடந்த கால நிகழ்வுகளின் தொகுப்பு அல்ல. அது மனிதகுலத்தின் ஒரு நீண்ட, நேர்கோட்டுப் பயணத்தின் கதை; அறியாமை, மூடநம்பிக்கை மற்றும் ஒடுக்குமுறையின் இருளிலிருந்து பகுத்தறிவு, அறிவியல், அறிவு மற்றும் சுதந்திரத்தின் ஒளியை நோக்கிய ஒரு தவிர்க்க முடியாத முன்னேற்றத்தின் ஆவணமாகும்.32 இந்த முன்னேற்றத்தின் உந்து சக்தி உலகளாவிய மனித பகுத்தறிவே ஆகும்.

வரலாற்று ஆய்வு என்பது இந்தப் பார்வையில் ஒரு அறிவியல் பூர்வமான முயற்சியாகக் கருதப்படுகிறது.33 வரலாற்றாசிரியரின் பணி, சரிபார்க்கக்கூடிய உண்மைகளை 32 கவனமாகச் சேகரித்து, அவற்றை விமர்சன ரீதியாகப் பகுப்பாய்வு செய்து, நிகழ்வுகளுக்குப் பின்னால் உள்ள பகுத்தறிவு சார்ந்த காரணகாரியத் தொடர்புகளை 64 வெளிக்கொணர்வதாகும். வரலாற்று விவரிப்புகள் தர்க்கரீதியாக ஒத்திசைவாகவும் 32, உணர்ச்சிகரமான அல்லது கற்பனையான கூறுகளை விட புறநிலைத் தன்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவும் இருக்க வேண்டும். தெய்வீகத் தலையீடு, விதி போன்ற பகுத்தறிவற்ற விளக்கங்கள் குறைக்கப்பட்டு 6, மனித முகமை மற்றும் சமூக, பொருளாதார, அரசியல் காரணிகளே வரலாற்று மாற்றத்தின் முதன்மைக் காரணிகளாகக் கருதப்படுகின்றன. மேலும், இயற்கை உலகில் இருப்பது போல, மனித வரலாற்றிலும் உலகளாவிய விதிகள் அல்லது வடிவங்கள் 32 இருக்கலாம் என்றும், அவற்றை பகுத்தறிவின் மூலம் கண்டறிய முடியும் என்றும் நம்பப்படுகிறது.

சுருக்கமாகச் சொல்வதானால், கார்ட்டீசிய தர்க்கவாதக் கண்ணோட்டத்தில், வரலாறு என்பது பகுத்தறிவின் மூலம் கடந்த காலத்தை மறுசீரமைக்கும் ஒரு செயல்முறையாகும். இது மனித முன்னேற்றத்தின் தர்க்கரீதியான மற்றும் பெரும்பாலும் தவிர்க்க முடியாத பாதையை வெளிப்படுத்தவும், எதிர்காலத்திற்கான பாடங்களைக் கற்றுக்கொள்ளவும் உதவும் ஒரு அறிவியல் பூர்வமான துறையாகும்.

இருப்பினும், இந்த கார்ட்டீசிய/அறிவொளி வரலாற்றுப் பார்வை, அதன் அனைத்து வலிமைக்கும் செல்வாக்கிற்கும் அப்பால், விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதல்ல. அதன் உலகளாவிய உரிமைகோரல்கள், புறநிலைத்தன்மை பற்றிய அதன் எளிமையான அனுமானங்கள், நேர்கோட்டு முன்னேற்றம் என்ற அதன் பார்வை, மற்றும் ஐரோப்பிய மையவாத சார்பு ஆகியவை ரொமாண்டிசிசம், ஹெகலியம் மற்றும் குறிப்பாக பின்நவீனத்துவம் போன்ற பிற்கால வரலாற்று மற்றும் தத்துவ சிந்தனைகளால் கடுமையாகக் கேள்விக்குள்ளாக்கப்பட்டன. இந்தப் பார்வையின் தாக்கம் நவீன வரலாற்றுத் துறையின் வளர்ச்சிக்கு ஒரு முக்கியமான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், அதன் வரம்புகளை உணர்ந்து கொள்வதும், வரலாற்றை அணுகுவதற்கான பலதரப்பட்ட, சிக்கலான வழிகளை அங்கீகரிப்பதும் இன்றைய வரலாற்று வரைவியலின் முக்கியப் பணியாகும். கார்ட்டீசிய தர்க்கவாதம் வரலாற்றைப் பகுத்தறிவின் வெளிச்சத்தில் பார்க்க முயன்றது; ஆனால் வரலாறு என்பது பகுத்தறிவை மட்டும் கொண்டதல்ல, அது மனித அனுபவத்தின் அனைத்து சிக்கல்களையும், முரண்பாடுகளையும், பன்முகத்தன்மையையும் உள்ளடக்கியது என்பதைப் பிற்கால சிந்தனைகள் நமக்கு நினைவூட்டுகின்றன.