Saturday, December 10, 2011

அறம் பாடும் பிடாதிபதியும் குட்டிகளை பகையாக்கி ஆட்டை கொண்டாடும் மாயப்புனைவுகளும்


அறம் பாடும் பிடாதிபதியும் குட்டிகளை பகையாக்கி ஆட்டை கொண்டாடும் மாயப்புனைவுகளும்...
     
      மனித உடல் படைப்பு முழுச்சுதந்திர இயக்கம் கிடைக்கப்பெற்ற படைப்பாக இயற்கையில் படைப்பின் மூலம் பரிணமிக்க வைத்துள்ளது. உடல், மனம், உணர்வு,  மற்றும சக்திநிலைக் கூறுகளின் அடிப்படையில் அது இயங்கும். புறத்தளத்தில் அதன் வினைவிளைவை எதிர்கொள்ளும் மனம் உணர்வுத்தளங்களில் தனது சக்திநிலை செயல்பாடுகளினால் புறநிலையை மாற்றும் முழு திறனும்  சுதந்திரமும் கொண்ட படைப்பாக மனித உடல் உள்ளது. அதன் புரிதல் தளத்தில் தொகுப்புகளாக்கப்பட்ட  உடல் குழுக்கள்  புறத்தில் பௌதீக மாற்றங்களை  ஏற்படுத்த  முரண் கொண்ட  இயற்கை சமன்பாடுகளை மீள் உருவாக்கம் செய்து கொள்ள அதில் வினையாற்றும் காரணிகளைப் பகுப்பாய்வு செய்து அதன்மீது வினையாற்றும் குழுக்களை உருவாக்கி வினையாற்றும் மாற்றம் விழைகிறது. அவ்வகையில் தொகுப்புகளான உடலியக்கத்தின் புறத்தில் செயல்படும் உறவுகள் முரண்களில் அதிகாரச் செயல்பாடுகள் முதலியவற்றை சரியாக புரிந்து கொள்ளவும் செயலாற்றவும் மர்க்சியம் தெளிவான பாதையை வழங்கி நிரூபணப்படுத்தியுள்ளது. பொருளியியல் முரண்களிலான உறவுகளில் மானுட உடல்கள் தொகுப்பு கையாளப்படும் அதிகாரம், குழு முரண்கள் பற்றிப் பார்வையை மார்க்சியம் தான் தந்திருக்கின்றது. இது ஜெயமோகன் உள்ளிட்ட பரிவாரதேவதைகளாலும் பெருங்குழுவாலும் வழிமொழியப் பட்டிருக்கிறது. இந்த அடிப்படையை ஏற்றுக்கொண்ட எல்லா உடல்களுக்குள்ளும் ஒரேவித பௌதீக வேதி வினைகள் நிகழும் என்று  எதிர்பார்ப்பதும் நிகழுகின்றன என்று அறுதியிடுவதும் படைப்பை அதன் நுட்பத்தை உணரவில்லை என்பதே உண்மை.  இதில் அழகு,அசிங்கம் என்ற இருமை நிலை மூலத்தில் உள்ளதா? அந்த மூலத்தை  ஏற்று வினையாற்றும் உடல்கள் சார்ந்ததா? உவப்பளிப்பது அழகு, ஒவ்வாமை அசிங்கமா? உவப்பும் ஒவ்வாமையும் பொதுத்தன்மை இல்லை. இதில் இயங்கும் அதிகாரங்கள் வெவ்வேறானவை.அழகு X அசிங்கம் என்ற ரசனைவாதத்திற்குட்பட்டதல்ல மார்க்சியம். வாசக உடலின் உணர்வுகளில் அதிர்ச்சி மதிப்பீடுகளை அளவெடுக்கும் நுட்பத்திற்கு ஜெயமோகனுக்கு பயன்படுகிறது என்ற அளவில் தலைப்பு உள்ளது. வாழ்க்கைக்கும் கலைக்குமான உணர்வு இப்படித்தான் ஜெயமோகனுக்கு பிடிபடுகிறது.
            இறந்தகால நிகழ்வுகளில் இன்பமாக உணர்ந்ததை எல்லாம் பதிவாக நிகழ்காலத்தில் அதை நீட்டிக்கும் இன்பநாட்டம் கொண்டது மனம். அந்த நீட்சியினால் நிகழ்காலத்தில் கூட இறந்த காலத்திலேயே வாழும் தன்மையுடன் மனம் செயல்பட்டு, அடையாளப்படுத்திக்கொண்டு உடல் இயக்கம்கொள்கிறது.அவ்வகை நீட்சி இயக்கத்திற்கு புனைவுகளும்,கதைகளும் தேவைப்படும் மயக்க நிலையை தோற்றுவிக்கின்றன. நிகழ்காலத்தில் வாழாமல் இறந்தகாலத்தில் வாழ்ந்து விடுதலை பெறாத மனதை தான அவை நிலை கொள்ள வைக்கின்றன.புனைவு கதைகளில் ஒருவர் தேர்ந்தவர் என்றால் இறந்தகாலத்திலேயே நம்மை வாழ வைத்து விடுதலையடையா மனதை போற்றும் மயக்க வித்தகர் என்று தான் கூறமுடியும். நிகழ்காலத்தில் வாழவும் முரண்களில் இயங்கி புறநிலையை மாற்றவும் மார்க்சிய-லெலினியம் வழி கூறுகிறது. இது மொழித்தளத்தில் விரிந்து இயங்கும் போது பிரச்சாரமாகப் போவது பல வேளைகளில் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.
   பொருளியல் விதிகள் இயங்கு தளத்திற்கு ஏற்ப வினைவிளைவுகளை ஏற்படுத்தலாம். ஆனால் அதன் பொதுத்தன்மை ஒன்றுதான். வரலாற்று நிகழ்வுகள் என்று குறிக்கும்போது வரலாறு பற்றியும்  அங்கு உடல்களின் வினையாட்டங்கள் பற்றியும் புரிதலிலேயே நிகழ்வுகளை விவரிக்க முடியும். இயற்கை முரண்கள் உடையது. புலன் சார்ந்த வாழ்வியல் இயக்கம் இருமை உடையது. இதன் அடிப்டையில் நிகழ்வுகளும் இருமை உடையது. பொருளியல் முரண்களும் அதன் விளைவுகளும் இருமை நிலையை தோற்றுவிக்கும் நிகழ்வுகளை, இறந்தகாலங்களின் தொகுப்பில் உடல் குழு தொகுப்புகள் நிகழ்த்திய வினைகளின் விளக்கம் மார்க்சிய பார்வை அடிப்படையில் சரியானது என நிரூபிக்கப்பட்டு உள்ளது. 
 புறத்தின் மீது வினை நிகழ்த்தும் உடலின் அகநிலைத் தன்மையை மார்க்சியம் மறுப்பதாக கூற இயலாது. ஆளுமையின் நுட்பத்தை இயங்கியலாகவே பார்க்கிறது. உடல்களின தொகுப்புகள்  இன்பநாட்டத்திற்கு நிறுவிய இறந்தகால கூறுகளை நீட்டிக்கும் பண்பாட்டுக் காரணிகளின் மையத்தை அது நிராகரிக்கவில்லை.  
 அரசியல்,பண்பாடு என்பவை அதிகாரம் சார்ந்தவைகளே அதிகாரம் முரண்களில் பிறப்பதே, உடல்களின் தொகுப்பில் புறம் சார்ந்த காரணிகளின் விழைவுகள் மீது இருமை வினையாற்ற அதிகாரங்கள்  பயன்படுகின்றன. அதிகார உற்பத்தி அதன் செயல்பாட்டின் பொருளியல் முரண்கள் எவ்வகை வினை நிகழ்த்துகின்றன என்பதற்கு மார்க்சிய கோட்பாட்டை ‘வாய்பாடக’ யாவராலும் முன்வைக்கப்படுவதில்லை மார்க்சியர்களாக ஜெயமோகனால் முன்மொழியப்படுபவர்கள் அப்படிப்பட்டவர்களாக இருக்ககூடும்.
 இயற்கை இருமைகளின் போராட்டம் என்றால், பொருளியல் முரண்களின் போராட்டத்தை அரசியலாக அணுகி, அதிகாரச் செயல்பாடுகளில் வினை எதிர் வினையாற்றும் வழித்தடத்தை மொழியும் மார்க்சியம், மாற்றுத் தரப்பு என்று குறிப்பிடப்படும் எதிர்நிலையை அதன் தன்மையில் தானே பார்க்க முடியும். நடுநிலை என்று ஒன்று இல்லை என்பதே அதிகாரச் செயல்வினைகளின் விளைவு.  
 எல்லா நிகழ்வுகளிலும் விதிகள் இயங்குகின்றன. வரலாறு என்று உடல்கள் நிகழ்த்தும் பௌதீக வினைகளிலும் விதிகள் இயங்கத்தான் செய்கின்றன. இதில் மாறாத்தன்மையுடன் வெவ்வேறு  தளங்களில் அவை வினையாற்றுவதும் காலங்கள் கடந்து வினைவிளைவுகள் அவ்விதிக்குட்பட்டுதான் உள்ளதும் உண்மை. மார்க்சியம் வரலாற்று நிகழ்வுகளின் மீதான பார்வையில் அதன் இயக்கத்தையும், தன்மையையும் விதிகட்குட்பட்டு விவரிப்பதை ஏற்காமாலிருக்க முடியாது.  
       விதிகள் போக்கை தீர்மானிக்கின்றன என்பது படைப்பின் இயங்கியல்,ஆற்றல்களின் மூலமான பேராற்றலால் (கடவுளால்) தான் போக்குகளின் விதியை மாற்ற முடியும் என்று நீங்கள் உணர்ந்தால்  அதை வெளிப்படையாக அறிவிப்பதில் உங்களுக்கு தடையுள்ளதா? மார்க்சியம் புலன்-பொருள் சார்ந்து அறிந்த நிரூபிக்கப்பட்ட மனித ஆற்றல்களின் இயக்கப் போக்குகளை மட்டுமே கணக்கில் கொண்டு பேசுகின்றது. மார்க்சியத்தின் அடிப்படையில் விரிவடையும் அதிகாரச் செயல்பாடுகளை வளப்படுத்தி, உடல் குழுக்கள் தொப்பையும் அதன் இயக்க  இயங்கியலையும், அதன் எல்லையை விரித்து காட்டியதில் லெனியத்தின் பங்கு சிறப்புடையதானதாலேயே மார்க்சிய-லெலினியம் என்று விளிக்கப்படுகிறது. கருத்தை களத்தில் நிருபணமாக்கியதில் லெலினியத்தின் பங்கை மார்க்சியர்கள் மறுப்பதில்லை.  
 எல்லா எழுத்துகளிலும் ஒரு அதிகாரம் இயங்குகின்றது. அவ்வதிகாரம் எதை சார்ந்ததாக இருக்கிறது என்பதிலிருந்து அதன் தன்மை நிர்ணயம் ஆகும். அவ்வகையில் பொருளியியல் முரண்களின் இருமைநிலையில் ஏதோ ஒன்றை சார்ந்துதான் ஒவ்வொரு எழுத்தும் நேரடியாகவோ மறைமுகமாகவோ இயங்குகின்றன. வரலாற்றெழுத்தும் ஏதோ ஒரு அதிகாரம் சார்ந்தே உள்ளன. அதிகாரம் செயலாற்றாத வெளி ஏதேனும் உண்டானால் அங்கு சார்பில்லா படைப்புகளும் சாத்தியம். நுண்மையின்  நுட்பத்துடன்  அதிகாரங்கள்  விரிக்கப்படுகின்றன என்பதே  இயங்கியல்  உண்மை.  
       ஜெயமோகன் தலை ஒரு விஷயத்தில் X-Y இரண்டு கோட்டிலும் ஆடுகின்றது. ‘‘நினைத்தாலே இனிக்கும்’’ திரைப்படத்தில் கதாநாயகி தலையாட்டும் காட்சியே ஜெயமோகனின் " அசிங்கமான மார்சியர்கள் " பதிவு கண்டவுடன் நினைவில் ஒடிநிற்கிறது.வரலாற்றில் குட்டிகளை பகையாக்கி ஆட்டை கொண்டாடி தொடரும் அதிகாரம் இதிலும் தன் முகம் காட்டதான் செய்கிறது.  

No comments:

Post a Comment