Sunday, May 4, 2014

சோழபுரம் கல்வெட்டு ஆய்வும் உழவாரப்பணியும்

சோழபுரம் கல்வெட்டு ஆய்வும் உழவாரப்பணியும்


                                  ஆறு மாதகாலம் பேசி மூன்றுமாத காலம் இதோ அதோ என் கிளம்பி ஒரு வழியாக அரியலூர் பேராசிரியர் இல.தியாகராசனோடு அவரின் குழு வரலாற்றுத்துறை தலைவர் ரவி,அன்பு ,ஆய்வு மாணவி சகிதம் கும்ப+கோணம் அருகிலிருக்கும் இன்றைக்கு சோழபுரம் என வழங்கப்பெரும் வீரநாராயணபுரத்தை அடைந்தோம்.குப்பைமேட்டிற்குள் புதையுண்டிருந்த விஸ்வநாதர் கோவில் பற்றி சென்ற வருடமே பதிவிட்டிருந்தேன்.அன்பர்கள் துணையோடு குப்பையிலிருந்து மீண்டாலும் மீண்டும் காடாகிவிட்டது.பேராசிரியர் அவ்வூர் நண்பர்கள் உதவியோடு புதர் அகற்றி கல்வெட்டை தியாகராசன் படிக்க படிக்க ஆர்வம் தீயாய் பற்றியது.ஆம் முதலாம் குலோத்துங்கன் 38ம் ஆட்சியாண்டின் அவ்வூர் சபையின் கல்வேட்டு. 906 ஆண்டுகளுக்கு முற்பட்டது.உள்ளூர் மக்கள் கூட போகாத மாட்டுத்தொழுவமாக உள்ளது.நாம் எத்தனை செய்தாலும் உள்ளூர்காரன் பாக்கலனா அதோ கதிதான்.விருப்பமுள்ளவர்கள் காமராசர் நகர் என்று சொல்லி சென்று பாருங்கள்.


No comments:

Post a Comment