Sunday, May 4, 2014

தாண்டி நிற்கும் கலைப்படைப்புகள்

சோழபுரம் கல்வெட்டு ஆய்வும் உழவாரப்பணியும்  

காலத்தைத் தாண்டி நிற்கும் கலைப்படைப்புகள்


கட்டுமானத்திற்கு தெளிவான திட்டம், வடிவமைப்பு,அதற்குறிய தொழிற்நூட்ப கோட்பாடு, கட்டுமான பொருட்கள் தேர்வு அதோடு இவன் முடிப்பான் என்றாய்ந்து   அவன் கண் விடும் மேலாண்மை.ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் நிற்கின்றன.என் தொழிநுட்ப             அறிவுக்கு எட்டியவரை இன்னும் ஆயிரம் ஆண்டுகள் நிற்கும் சோழக்கட்டுமானங்கள்.மனிதசக்தியின் இடையூறுகள் இல்லாவிடில்...இக்கட்டுமானங்கள் பல இடங்களில் ஆக்கிரமிக்கபட்டு சிதைக்கப்படுகின்றன.செல்லும் வழிகள் கூட பல இடங்களில் சந்துகளாக்கப்பட்டு விட்டன.அடுத்த தலைமுறைக்கு இந்த நுட்பங்களை கடத்த முடியாவிட்டாலும்,அவர்கள் அறிந்து கொள்ள இவற்றை நாம் விட்டுவைத்தால் நல்லது.தனியார்மயம்,தாராளமயம் புராதான சின்னங்கள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பையும் விடுவதாய் இல்லை அரசு புராதானசின்னங்கள் பராமரிப்பு,பாதுகாப்பை தனியாரிடம் விடுவதற்கு தயாராகிக்கொண்டிருப்பது இந்த புராதான சின்னங்கள் எதிர் நோக்கும் இன்னுமொரு அபாயம்.

No comments:

Post a Comment