கங்கைகொண்டசோழீஸ்வரத்தின் அடையாளம் எனக் கூறும் அளவிற்கு பரந்துபட்டக் கவனத்தைப் பெற்றிருக்கும் இச்சிலைத் தொகுப்பு மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தும்.
சண்டேச்வர அனுகிரகமூர்த்தி எனப்படும் சண்டேஸ்வர ஆட்கொண்டார் அம்மையோடு சண்டேசனுக்கு கொன்றை மாலைச் சூடுகிறார். தன் மீது கொண்ட குலையாத பக்தியால் தந்தையையே கொன்றவனை இனி நான் உனக்கு அப்பன் என மகனாக வரித்துக் கொண்டு சடையிலிருந்த கொன்றை மாலையைச் சூடுகிறார் சிவன். அதை வணங்கி மெய்யடக்கத்துடன் ஏற்கிறார் சண்டேசன்.
இது பலர் அறிந்த புராணக் கதை.
அறியாத செய்தியும் இதுவரைப் பதிவுறாதத் செய்தியும் ஒன்று உண்டு.
இந்த சிலைக்கு இராசேந்திரச்சோழன் மிகுந்த தனிக் கவனமும் அக்கரையும் கொண்டிருந்திருந்தார் என்பது தான் அது.
என்ன கோமகன் உடனிருந்து பார்த்தது போல் சொல்கிறாய்? எனும் வினாவிற்கு நான் கூறுவது இச்சோழீஸ்வரத்தில் அவர் கூட இருந்து பார்த்தாலும் விளங்காது அவரின் உயிர் உடல் கொண்டு பார்த்தால் விளங்கும்.
ஆம்.
கொஞ்சம் மற்றக் கோவில் அமைப்பை நினைவில் கொண்டு வாருங்கள். செவிட்டுசாமி எனும் சண்டேஸ்வர் சன்னதி இருக்கும் இடத்தை நினைத்துப் பாருங்கள். அது கோமுகம் எனும் அபிஷேகநீர்ச் சாளவத்திற்கு வலது பக்கமாகவும் அர்த்தமண்டபத்தின் வடபுற நுழைவு வாசலுக்கு இடப்பக்கமாகவும் அமைந்திருக்கும். இந்த அமைப்பு தான் எல்லாக் கோவிலிலும் இருக்கும் அது தான் அமைப்பு விதி.
ஆனால் கங்கைகொண்டசோழீஸ்வரத்தில் அப்படி இருக்காது. மற்றக் கோவிலுக்கு மாறாக அர்த்த மண்டபத்தின் வடபுறத்தின் நுழைவு வாயிலின் வலதுபுறம் அமைந்திருக்கும். அதாவது மூலவரை வணங்கி வடக்குப் பக்கவாசல் வழி வெளியே வந்தால் எல்லாக் கோவிலிலும் இடதுகைப் பக்கம் அதாவது தஞ்சாவூரில் உள்ளது போல் இருக்க வேண்டிய சண்டேசுவரர் சன்னதி மாறி க.கொ.சோ.புரத்தில் வலது கைப்பக்கம் இருக்கும்.
இந்த கோவிலுக்கு வருபவர்கள் இந்த அரிதான வேறுபாட்டை மாற்றத்தைக் காண்பதில்லை.
ஏன் அப்படி மாற்றி இப்படிக் கட்டவேண்டும்.
அது தான் இராசேந்திரன்.
இந்த சிலையின் சூட்சமம், மறைபொருளே அதில் தான் இருக்கிறது.ஈர்ப்பின் மையமே அதனால் தான்.
ஏனெனில் அவர் சிவசரணசேகரன். சிவனைச் சரணடைந்தவரைக்காப்பவர். சிவசரணரை வணங்குபவரை வணங்குபவர்.
அந்த மறைபொருளை அடுத்துப் பார்போம்.
ஐயா! கட்டுரையின் அடுத்த பதிவு கிடைக்கவில்லையே?
ReplyDelete